search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரான்சு"

    பிரான்சில் கல்வி பயில 10 ஆயிரம் பேர் இந்தியாவில் இருந்து விசா பெறும் வாய்ப்பு உள்ளதாக துணை தூதர் கேத்தரின் ஸ்வார்டு கூறியுள்ளார். #studentvisa

    புதுச்சேரி:

    பிரான்ஸ் நாட்டுக்கான தமிழக- புதுவை துணை தூதர் கேத்தரின் ஸ்வார்டு புதுவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரான்சுக்கு கல்வி கற்கவும், வர்த்தகம், சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிரான்சுக்கு சராசரி வருகையாளர் எண்ணிக்கை தற்போது 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

    வருகிற 2020-ம் ஆண்டில் பிரான்சில் கல்வி பயில 10 ஆயிரம் பேர் இந்தியாவில் இருந்து விசா பெறும் வாய்ப்பு உள்ளது.


    பிரான்ஸ் தூதரகத்துடன் இணைந்து இந்த சேவையை வழங்கும் முறை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

    வருகிற ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் புதுவையில் இருந்து பிரான்ஸ் செல்ல விசா விண்ணப்பங்கள் எண்ணிக்கை 34 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

    தென் இந்தியாவிலேயே அதிக அளவில் புதுவையில் இருந்து விண்ணப்பிக்கின்றனர்.

    கொச்சியில் இது 51 சத வீதமாகவும், சென்னையில் 39 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #studentvisa

    மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் பிரான்ஸ் செல்கிறார். பாரீசில் 12 மற்றும் 13-ந்தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். #BJP #NirmalaSitharaman #RafaleDeal
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டின் டிசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்க 2016-ம் ஆண்டு மோடி அரசு ஒப்பந்தம் செய்தது. அதில் ஊழல் நடந்து இருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

    இந்த நிலையில் உதிரி பாகங்கள் தயாரிப்பதற்கு அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபன்ஸ்’ நிறுவனத்தை இந்திய அரசு தான் சிபாரிசு செய்தது என பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலண்டே கூறினார். இதனால் இப்பிரச்சனையில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

    ஹோலண்டேயின் கருத்தை மத்திய அரசும், பிரான்ஸ் அரசும் மறுத்துள்ளன. இதுகுறித்து டசால்ட் நிறுவனமும், ரிலையன்சும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதில் எங்களது தலையீடு எதுவும் இல்லை என இரு நாடுகளும் மறுத்துள்ளன.

    இந்த நிலையில் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் (அக்டோபர்) பிரான்ஸ் செல்கிறார். பாரீசில் 12 மற்றும் 13-ந்தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    பிரான்ஸ் நாட்டின் ராணுவ மந்திரி புளோரன்ஸ் பார்லியை சந்தித்து பேசுகிறார். அப்போது மேற்கு ஆசியா மற்றும் இந்தோ- பசிபிக் கூட்டு ராணுவ பயிற்சியை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது.


    பாரீசில் தங்கியிருக்கும் போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரனை சந்திக்கிறார். அங்கிருந்து ஆசியான்நாடுகளின் ராணுவ மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்க சிங்கப்பூர் செல்கிறார்.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரான்ஸ் அதிபர் மேக்ரன் இந்தியா வந்தார். அவரை தொடர்ந்து அக்டோபரில் ராணுவ மந்திரி பார்லியும் இந்தியா வருகை தந்தார். அப்போது பிரான்சில் ராணுவ மந்திரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. எனவே தான் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #BJP #NirmalaSitharaman #RafaleDeal
    ×