search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பால்குட ஊர்வலம்"

    • கணபதி ஹோமம் நடத்தப்பட்டு இருமுடி அணியும் விழா தொடங்கியது.
    • அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, முதல் முறையாக ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் அரூர் மேல்பாட்ஷாபேட்டையில் உள்ள ஓம் சக்தி மன்றம் சார்பில் கடந்த 23-ம் தேதி அதிகாலை கணபதி ஹோமம் நடத்தப்பட்டு இருமுடி அணியும் விழா தொடங்கியது.

    இதில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். மேலும் விழாவின் முக்கிய நாளான நேற்று ஓம் சக்தி பக்தர்களின் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

    இந்த ஊர்வலத்தில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்துக் கொண்டு பாட்ஷாபேட்டையில் உள்ள வீதிகளின் வழியாக சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.

    மேலும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஓம் சக்தி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, முதல் முறையாக ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

    இந்த ஊஞ்சல் உற்சவத்தில் பம்பை வாத்தியங்கள் முழங்க தாலாட்டுப்பாடி அம்மனை தூங்க வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்களும் , பொதுமக்களும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து, ஊஞ்சல் உற்சவத்தை கண்டு ரசித்தனர். இதனை தொடர்ந்து இரவு இருமுடி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    • முத்தாரம்மன் கோவிலில் பால்குட அபிஷேக விழா 31-ந் தேதி நடைபெறுகிறது.
    • இரவு 8.10 மணிக்கு முத்தாரம்மன் திருத்தேரில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    உடன்குடி:

    ஸ்ரீகாமதேனு குரூப்ஸ் அபிஷேக வழி பாட்டு மன்றத்தினர், ஸ்ரீராஜ லட்சுமி குரூப்ஸ் மற்றும் ஆன்மீக பெருமக்கள், முத்தாரம்மன் தசரா நண்பர்கள் அன்னதான குழுவினர் இணைந்து குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பால்குட அபிஷேக விழா 31-ந் தேதி நடைபெறுகிறது.

    இதை முன்னிட்டு அன்று மாலை 4.10 மணிக்கு அரசடி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 5மணிக்கு ஸ்ரீஞானமூர்த்தீஸ்வரர், சமேத ஸ்ரீமுத்தாரம்மனுக்கு மஹா அபிஷேகம், 108சங்காபிஷேகம், 108கலாசாபிஷேகம், இரவு 7மணிக்கு அலங்கார மஹாதீபாராதனை, இரவு 8.30மணிக்கு வில்லிசை, இரவு 12மணிக்கு கற்பூர ஜோதி உள்ளிட்ட நிகழ்ச்சி கள் நடக்கிறது.

    ஜனவரி 1-ந் தேதி காலை 6மணிக்கு கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், காலை 6.20மணிக்கு தனபூஜை, கோபூஜை, கஜபூஜை, காலை 6.30மணிக்கு 108கலச பூஜை, உலக நன்மை வேண்டிய தீபாராதனை, காலை 6.45மணிக்கு சிதம்பரேஸ்வரருக்கு மகாதீபாராதனை, காலை 7மணிக்கு கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து முத்தாரம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வருதல், காலை 8.10மணிக்கு அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு தீபாராதனை, காலை 8.30மணிக்கு குலசை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலிருந்து கோலாட்டம், யானை ஊர்வலத்துடன் மேளதாளம் முழங்க 1008பால்குட பவனி முக்கியவீதிகள் வழியாக வருதல், பகல் 12.20மணிக்கு விவசாயம் தழைக்க, மழைவேண்டி 1008பால்குட அபிஷேகம், 108கலசாபிஷேகம், 108சங்காபிஷேகமும் நடக்கிறது. மதியம் 3மணிக்கு 108சுமங்கலி பெண்கள் குலவையிட கும்மி, மாலை 5.10மணிக்கு அம்பாள் ஊஞ்சல் சேவை, மாலை 6மணிக்கு 1008மஹா திருவிளக்கு பூஜை வழிபாடு, இரவு 8.10மணிக்கு முத்தாரம்மன் திருத்தேரில் பவனியும், இரவு 8.30மணிக்கு ஸ்ரீபைரவருக்கு வடை மாலை அணிந்து சிறப்பு பூஜையும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்த அமைப்பின் நிர்வாகி கள் செய்து வருகின்றன.

    • 13-ம் ஆண்டு திருவிழா நடந்தது
    • அம்மனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆதனுர் கிராமத்தில் ஸ்ரீ படவேட்டம்மன் கோவில் உள்ளது.

    இங்கு 13-ம் ஆண்டு பால்குடம் விழா நடைபெற்றது.

    பால்குட ஊர்வலத்தில் பெண்கள் விரதமிருந்து மஞ்சள் சேலையில் பங்கேற்றனர். விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலம் முக்கிய வீதிகளில் சென்றடைந்தது.

    இதில் பல பெண் பக்தர்கள் திடீரென அருள் வந்து ஆடினர். அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டு நேர்த்திகடன்

    • சிறப்பு பூஜை நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை ஸ்ரீ தேவி மாசுபட அம்மன் ஆலயத்தில் 58 ஆம் ஆண்டாக 6ஆம் வெள்ளி முன்னிட்டு 1008 பால் குட ஊர்வலம் நடைபெற்றது.

    பால் குட ஊர்வலத்தை முன்னிட்டு காமாட்சியம்மன் பேட்டை திரவுபதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 1008 பால் குடங்கள் ஏந்திய பெண்கள் ஊர்வலம் புறப்பட்டு நெல்லூர் பேட்டை ஸ்ரீதேவி மாசுபடா அம்மன் கோவிலை அடைந்தது.

    முன்னதாக 1008 பால்குடம் ஊர்வலத்தை நகர மன்ற தலைவர் எஸ். சவுந்தரராசன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகர் மன்ற உறுப்பினர்கள் ஜி.எஸ்.அரசு, என்.கோவிந்தராஜ், ஏ.தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • பட்டத்து மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
    • பட்டத்து மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் மேலத்தெருவில் பட்டத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை மற்றும் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி பெரிய ஏரிக்கரையில் பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் பட்டத்து மாரியம்மனுக்கு பால் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பட்டத்து மாரியம்மனை தரிசனம் செய்தனர்.

    • பாண்டவர்களின் மூத்தவரான தர்மருக்கு பட்டாபிஷே முடிசூட்டு விழாவும் நடைபெற்றன.
    • ஊர் பொதுமக்கள் சார்பாக காலை முதல் மாலை வரை சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள களர் பதி பகுதியில் 30 நாட்களாக நடைபெற்ற மஹாபாரத சொற்பொழிவு நிறைவு நாளை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் செவ்வாடையணிந்து ஊர்வலமாக சென்று முனியப்பன் கோவில் வளாகத்தில் இருந்து ஊரின் முக்கிய வீதி வழியாக கேரளா செண்டை மேள தாளம் முழங்க பால் குடம் சுமந்து திரவுபதியம்மன் கோவிலுக்கு சென்றனர்.

    அங்கு சிவகுருக்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பாண்டவர்களின் மூத்தவரான தர்மருக்கு பட்டாபிஷே முடிசூட்டு விழாவும் நடைபெற்றன.

    இவ்விழாவில் திரவுபதியம்மனை ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இத்துடன் ஊர் பொதுமக்கள் சார்பாக காலை முதல் மாலை வரை சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா கோவிந்தராஜ், ஊர் மூப்பர் சீனிவாசன், ஊர் நாய்க்கர் கணேசன், ஊர் கவுண்டர் அண்ணாமலை, களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி, துணைத் தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி மற்றும் ஊர் பொதுக்கள் ஒருங்கிணைந்து செய்தனர்.

    • ஆடி 3-ம் வெள்ளியையொட்டி நடந்தது
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா கச்சால நாயக்கர் தெருவில் அமைந்துள்ள கீழ்படவேட்டம்மன் ஆலயத்தில் ஆடி 3-ம் வெள்ளி முன்னிட்டு பால் கூட ஊர்வலம் இன்று நடைபெற்றது.

    கீழ்படவேட்டம்மன் ஆலயத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ படவேட்டமனுக்கு பக்தர்கள் காப்பு கட்டி இன்று பாலாற்றங்கரையிலிருந்து கரகம் ஏந்தி 100-க்கும் மேற்பட்டோர் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வன்னிவேடு மோட்டூர், தொப்பை செட்டி தெரு, வாலாஜா எம்பிடி ரோடு வழியாக கச்சால நாயக்கர் தெரு வந்து கீழ்பட வேட்டம்மன் ஆலயத்திற்கு வந்து அடைந்தனர்.

    இதைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு பூஜை செய்து தீபாராதனை நடைபெற்றது.இதனை தொடர்ந்து கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், அன்னதானமும் நடைபெற்றது.

    பின்னர் மாலை 4 மணியளவில் வாணவேடிக்கையுடன் அம்மன் திருவீதி உலா நடைபெறும். நிகழ்ச்சியினை நாட்டாமைத்தாளர்கள், ஜூரிகள், பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.

    ×