search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலாலயம்"

    • 24-ந் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்குகிறது.
    • 27-ந் தேதி 4-ம் கால யாகசாலை பூஜைகளும் நடக்கிறது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நடைபெறும் மகாமக விழா உலக அளவில் பிரசித்தி பெற்றது. பழமையான இந்த கோவிலில் குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி கோவில் விமான பாலாலய விழா வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    இதனை முன்னிட்டு 24-ந் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புன்யா யாகவாசனம், கணபதி ஹோமம் மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்குகிறது.

    தொடர்ந்து 25-ந் தேதி கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை உள்ளிட்ட பூஜைகளும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது.

    26-ந் ேததி 3-ம் கால யாகசாலை பூஜைகளும், 27-ந் தேதி நான்காம் கால யாகசாலை பூஜைகளும் நடக்கிறது.

    தொடர்ந்து கடங்கள் புறப்பாடு நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விமான பாலாலய விழா குழுவினர் மற்றும் மந்திரபீடேஸ்வரி பக்தர்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.

    • இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
    • இன்று பூர்ணாஹுதி மற்றும் அதனை தொடர்ந்து மகாதீபாராதனை நடக்கிறது.

    திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயம் உறையூர் காந்திமதி அம்மன் உடனுறை பஞ்சவர்ணேஸ்வரசுவாமி கோவிலாகும். உதங்க முனிவருக்கு சிவபெருமான் ஒவ்வொரு காலங்களில் ஐந்து வண்ணங்களோடு காட்சி அளித்ததால் ஐவண்ணப்பெருமான் (பஞ்சவர்ணேஸ்வரர்) என அழைக்கப்பட்டார். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    இங்கு வழிபடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை என்பதால் திருமுக்கீச்சுரம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தகயை சிறப்பு வாய்ந்த உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் மகர லக்னத்தில் காந்திமதி அம்மன் உடனுறை பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் பாலாலயம் நடைபெற உள்ளது.

    இதையொட்டி இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, வாஸ்துசாந்தி, விமானம் கலாகர்ஷணம் முதல்கால யாகபூஜை, பூர்ணாஹுதி மற்றும் அதனை தொடர்ந்து மகாதீபாராதனையும் நடக்கிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜையும், காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் விமான கடத்தில் இருந்து சித்திர படத்தில் பாலாலயம் மற்றும் மகாதீபாராதனையும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவில்களான நவசந்தி விநாயகர் கோவில்களில் குபேர கணபதி கோவிலில் பாலாலய ஸ்தாபனம் நடந்தது.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவில்களான நவசந்தி விநாயகர் கோவில்களில் குபேர கணபதி கோவில் புதிதாக கட்டப்பட உள்ளது. அதற்காக கோவிலில் பாலாலய ஸ்தாபனம் நடந்தது. முன்னதாக காலை 9 மணியில் இருந்து 10.30 மணிவரை யாக பூஜை, பாலாலய படத்துக்கு ஆவாஹனம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து பூர்ணாஹூதி, நைவேத்தியம், தீபாராதனை ஆகியவை நடந்தது.

    நிகழ்ச்சியில் சிவன் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ×