search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்"

    • பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது.
    • முத்துக்குமாரசாமி சப்பரத்தில் எழுந்தருளிபக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    சிவகிரி:

    சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது. கந்த சஷ்டியை முன்னிட்டு மூலவர்க்கு காலை 9 மணியளவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள், தீபாராதனையும் நடைபெற்றது.

    மாலையில் முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    6-ம் திருநாளான 30 -ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சூரசம்ஹாரம் நிகழ்ச்சி மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 31-ந் தேதி (திங்கட்கிழமை) திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், 1-ந் தேதி (செவ்வாய்கிழமை) ஊஞ்சல் காட்சியும், 2 -ந் தேதி (புதன்கிழமை) பள்ளியறை நிகழ்ச்சியும், 3 -ந் தேதி (வியாழக்கிழமை) ஊஞ்சல் காட்சியும், 4 -ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று தளத்து கோவிலில் வைத்து மகுடாபிஷேகம் விழா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் ராஜா குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

    ×