search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார் உரிமையாளர்"

    • மதுரையில் பார் உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த ஒருவரும் சிக்கினார்.

    மதுரை

    செக்கானூரணி நேதாஜி தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 57). இவர் மதுரை சுப்பிரமணியபுரம் மேயர் முத்துபாலம் அருகில் உள்ள டாஸ்மாக் அருகே பார் நடத்தி வருகிறார்.

    நேற்று இவர் வேளாண் பொறியியல் அலுவலகம் அருகே நடந்து சென்றார். அவரை 2 பேர் வழிமறித்து கத்தி முனையில் பணம் பறித்து தப்பினர். இந்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.

    தெற்கு துணை கமிஷனர் சாய்பிரனீத் மேற்பார்வையில், தெற்கு வாசல் உதவி கமிஷனர் சண்முகம் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    அப்போது சந்தேகத்தின் பேரில் 2 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் ஜெய்ஹிந்துபுரம், ராமையா தெருவை சேர்ந்த சந்தோஷ் குமார் (27), ஜீவா நகர், வள்ளுவர் தெருவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (27) என்பது தெரிய வந்தது.

    சந்தோஷ்குமார் மீது செல்லூர், ஜெயஹிந்துபுரம், சுப்பிரமணியபுரம் ஆகிய போலீஸ் நிலையங்களில்

    10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தட்சிணாமூர்த்தி மீது பாலமேடு, நாகமலை புதுக்கோட்டை, சோழ வந்தான், அவனியாபுரம், எஸ்.எஸ்.காலனி, சுப்பி ரமணியபுரம் ஆகிய காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    இதனை தொடர்ந்து பார் உரிமையாளர் கணேசனை கத்திமுனையில் மிரட்டி பணம் பறித்த மேற்கண்ட இருவரையும் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் கைது செய்தனர்.

    ஆயுதங்களுடன் வாலிபர் கைது

    ஜெய்ஹிந்துபுரம் போலீசார் நேற்று தேவர் பாலம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு ஒருவர் பதுங்கி இருந்தார். அவரிடம் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கொள்ளை அடிப்ப தற்காக ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த, ஜெய்ஹிந்த்புரம் பாலமுருகன் என்ற பஞ்சாயத்து பாலா (25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு நின்றிருந்த அழகுதுரையை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது.
    • ஆத்திரமடைந்த மாடசாமி, அவரது மகன் மற்றும் 5 பேருடன் அழகுதுரை வீட்டிற்கு சென்றனர்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள மஞ்சநம்பிகிணற்றை சேர்ந்தவர் அழகுதுரை (வயது28). பூ வியாபாரி.

    கொலை

    நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு நின்றிருந்த இவரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது.

    இது தொடர்பாக கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கழுகுமலை கரிசல்குளத்தை சேர்ந்த ஸ்டாலின், பட்டுராஜ், பாலமுருகன், பாலாபாண்டி மற்றும் மஞ்சநம்பிகிணற்றை சேர்ந்த கனகராஜ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கூறியதாவது:-

    வாக்குமூலம்

    அழகுதுரை சம்ப வத்தன்று தனது உறவினருடன் மஞ்ச நம்பிகிணற்று பகுதியில் உள்ள பாருக்கு மதுக்குடிக்க வந்தார். அப்போது அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர்.

    இதைப்பார்த்த பார் உரிமையாளரான மாடசாமி அதனை கண்டித்தார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாடசாமி, அவரது மகன் பட்டுராஜா மற்றும் உறவினர்கள் 5 பேருடன் அழகுதுரை வீட்டிற்கு சென்றோம்.

    அப்போது அங்கிருந்த அழகுதுரையிடம் , எங்கள் பாரில் வந்து எப்படி நீங்கள் தகராறு செய்யலாம் என கேட்டோம். இதனால் அவருக்கும், எங்களுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாங்கள் அரிவாளால் அழகுதுரையை வெட்டிக் கொன்றோம்.

    இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.

    தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையில் தொடர்புடைய பார் உரிமையாளர் மாடசாமி மற்றும் நாகராஜ் ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×