search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரதியார் பல்கலை"

    • காவலாளிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    வடவள்ளி

    கோவை மாவட்டம் மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியான கனுவாய், மருதமலை அடிவாரம் , யானை மடுவு, அட்டுக்கல் உள்ளிட்ட பகுதியில் கடந்த சில தினங்களாக ஒற்றை யானை ஒன்றும், குட்டிகளுடன் 17 யானைகளும், 2 பிரிவாக இரவு நேரங்களில் ஊருக்குள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்று சேதப்படுத்தி வந்தது.

    அதில் சுமார் 15 வயது மதிக்கதக்க ஒற்றை ஆண் யானை தனியாக குப்பேபாளையம் பகுதி மற்றும் அட்டுக்கல் கெம்பனூர் ஆகிய பகுதிகளில் ஊருக்குள் புகுந்து வீடுகள் மற்றும் கடைகளை உடைத்து அங்கு இருக்கும் அரிசி மற்றும் உணவுப்பொருட்களை தின்று வந்தது. இந்த நிலையில் இந்த யானை மருதமலைப் பகுதிக்கு இடம் பெயர்ந்தது. அங்கு இரவு நேரங்களில் உலா வந்த வண்ணம் இருந்தது. அப்போது யானை கூட்டம் பாரதியார் பல்கலைக்கழக பின் பகுதி வழியாக இரவு வளாகத்திற்குள் நுழைந்தது. அந்த யானை 2-வது கேட்டின் காவலாளி இருக்கும் இடத்தை நோக்கி சென்றது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    காவலாளி அறையில் தும்பிக்கையை விட்டு உணவு ஏதாவது உள்ளதா என்று தேடி பார்த்து சிறிது நேரம் அங்கேயே நின்றது. இந்த யானையை சிலர் செல்போனில் படம் பிடித்தனர். அது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.இந்த ஒற்றை யானை விரட்டுபவர்களை துரத்துவதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

    எனவே மேற்கு மலைத்தொடர்ச்சி பகுதியில் சுற்றி வரும் இந்த ஒற்றை யானையை அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்பாடு முன் வேறு இடத்திற்கு இடம் பெயர்ச்சி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். மேலும் யானை இருக்கும் இடத்தை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தால் சம்பவ இடத்திற்கு தாமதமாக வருவதாகவும், ஒரு சில இடங்களில் காலை தான் வருவதாகவும் விவசாயிகளும், பொதுமக்களும் புகார் தெரிவித்து உள்ளனர்.

    • விழாவானது 29-ந் தேதி முதல் ஆகஸ்டு 31-ந் தேதி வரை நடக்கிறது.
    • வேலூர் சிப்பாய் கழகம் பற்றிய குறும்படம் இடம் பெற்றது.

    வடவள்ளி

    பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக 75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கடந்த 29-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. விழா ஆகஸ்டு 31-ந் தேதி வரை நடக்கிறது.

    இதில் ஒரு பகுதியாக சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை கவுரவிக்கும் பொருட்டு, பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி தன்னார்வலர்களுக்கு, வேலூர் சிப்பாய் கழகம் பற்றிய குறும்படம் மற்றும் பி. எஸ். குமாரசாமி ராசா பற்றிய சுவரொட்டி விளக்க காட்சியும் இடம் பெற்றது. அவர்களது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    விழாவினை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் காளிராஜ், வேலூர் சிப்பாய் கழகத்தில் பங்காற்றிய வீரர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பதிவாளர் முருகவேல், ரூபா குணசீலன், ஆட்சி குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மணிமேகலை, வசந்த், ஆசிரியர் சங்க தலைவர் மஞ்சு புஷ்பா ஆகியோர் பங்கேற்றனர்.

    சுவரொட்டி விளக்க காட்சியில் பாரதியார் பல்கலைக்கழக தன்னார்வலர்கள் நாகராஜ், பவதாரணி ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். எம்.ஜி.ஆர் கல்லூரி அருண் பிரகாஷ், யாழினி ஆகியோர் இரண்டாம் பரிசு பெற்றனர். பி.எஸ். ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரி தன்னார்வலர்கள் சுருதி, ஜானகி ஆகியோர் மூன்றாம் பரிசு பெற்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் அண்ணாதுரை செய்திருந்தார். 

    ×