search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரதி பிரவீன் பவார்"

    • ஜிப்மருக்கு இந்த ஆண்டு ரூ.1340 கோடி நிதி ஒதுக்கீடு.
    • இடை நிலை சுகாதார சேவை மேம்பாட்டுக்காக ரூ.70 கோடி ஒதுக்கீடு.

    மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் புதுச்சேரியில் நடைபெற்ற சுகாதாரத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: 


    புதுச்சேரி அரசு சுகாதாரத் துறையை சிறப்பாகச் செயல்படுகின்றது. பேறு காலத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதம் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைத்துள்ளது. பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 29,000 நோயாளிகள் இலவசமாக உயர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

    தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ் புதுச்சேரிக்கு ஆரம்ப நிலை மற்றும் இடை நிலை சுகாதார சேவை மேம்பாட்டுக்காக ரூ.70 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. அதேபோல் பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் உள்கட்டமைப்பு மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் புதுச்சேரிக்கு ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மருக்கு இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு ரூ.1340 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


    முன்னதாக புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் அமைத்தல், மருந்தியல் பூங்கா உருவாக்குதல், புற்றுநோய்க்கு கதிரியக்க சிகிச்சை மையம் அமைத்தல் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் ரங்கசாமி மத்திய இணை மந்திரி பாரதி பிரவீன் பவாரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், ஜிப்மர் இயக்குனர் டாக்டர் ராகேஷ் அகர்வால், புதுச்சேரி அரசின் நலவழித்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

    • கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
    • காச நோயாளிகளுக்கு, மக்கள் பிரதிநிதிகள் உதவ வேண்டும்.

    மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் தமிழகம் வந்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுள்ளார்.

    தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சுகாதாரத்துறை அலுவலர்கள் உடனான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

    மத்திய அரசின், தேசிய சுகாதார இயக்கம், பள்ளி மாணவர்கள் மருத்துவ பரிசோதனை திட்டம், நடமாடும் மருத்துவ சேவைகள், பிரதம மந்திரி தேசிய இரத்த சுத்திகரிப்பு திட்டம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    காச நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் தலா 3 பேரை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில் முழுமையாக காச நோயை நம்மால் ஒழிக்க முடியும்.

    தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் அதிக அளவில் பிரசவங்கள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மருத்துவர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் பாராட்டுகிறேன். அனைவரும் இணைந்து செயல்பட்டதால் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


    இதை தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்த மத்திய மந்திரி பாரதி பிரவீன் பவார், சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்தார். நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதவல்லி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    ×