search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் மத்திய அரசு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன- மத்திய மந்திரி பாராட்டு
    X

    மத்திய மந்திரி பாரதி பிரவீன் பவார்

    தமிழகத்தில் மத்திய அரசு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன- மத்திய மந்திரி பாராட்டு

    • கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
    • காச நோயாளிகளுக்கு, மக்கள் பிரதிநிதிகள் உதவ வேண்டும்.

    மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் தமிழகம் வந்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுள்ளார்.

    தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சுகாதாரத்துறை அலுவலர்கள் உடனான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

    மத்திய அரசின், தேசிய சுகாதார இயக்கம், பள்ளி மாணவர்கள் மருத்துவ பரிசோதனை திட்டம், நடமாடும் மருத்துவ சேவைகள், பிரதம மந்திரி தேசிய இரத்த சுத்திகரிப்பு திட்டம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    காச நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் தலா 3 பேரை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில் முழுமையாக காச நோயை நம்மால் ஒழிக்க முடியும்.

    தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் அதிக அளவில் பிரசவங்கள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மருத்துவர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் பாராட்டுகிறேன். அனைவரும் இணைந்து செயல்பட்டதால் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


    இதை தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்த மத்திய மந்திரி பாரதி பிரவீன் பவார், சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்தார். நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதவல்லி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    Next Story
    ×