search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு உபகரணங்கள்"

    • கையுறைகள், முகக்கவசம், மழை கோட் வழங்கப்பட்டது
    • 70 பேர் பணியாற்றி வருகின்றனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் முதல் நிலை பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது.

    இந்த பேரூராட்சியில் தூய்மை பணிகளில் 70 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு கையுறைகள், முகக்கவசம், மழை கோட் உள்பட பாதுகாப்பு உபகரணங்களை அம்மூர் பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாதன் வழங்கினார்.

    அப்போது இளநிலை உதவியாளர் மனோகர், சுகாதார மேற்பார்வையாளர் வினோதினி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • துப்புரவு பணியாளர்களின் பணி ஈடு இணையற்றது. கொரோனா தொற்று பரவல் காலத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே வர முடியாத சூழ்நிலையிலும், துப்புரவு பணியாளர்கள் வெளியே வந்து களத்தில் இறங்கி பணிபுரிந்தது, மிகவும் உன்னதமான செயலாகும்.
    • தமிழ்நாட்டில் துப்புரவு பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் குறித்த முதன்மை பயிற்சியாளர்களுக்கான பயிற்சி மிகச் சிறப்பாக தொடங்கியுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரத்தில் வாஷ் மற்றும் யுனிசெப் நிறுவனம் சார்பில் திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த முதல்நிலை பயிற்சியாளர்கள் பங்கேற்ற தூய்மை பணியாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி வகுப்பினை கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்து பேசியதாவது:-

    துப்புரவு பணியாளர்களின் பணி ஈடு இணையற்றது. கொரோனா தொற்று பரவல் காலத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே வர முடியாத சூழ்நிலையிலும், துப்புரவு பணியாளர்கள் வெளியே வந்து களத்தில் இறங்கி பணிபுரிந்தது, மிகவும் உன்னதமான செயலாகும். அப்படிப்பட்ட துப்புரவு பணியாளர்களின் பாதுகாப்பும் மிகவும் முக்கியமானது.

    தமிழ்நாட்டில் துப்புரவு பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் குறித்த முதன்மை பயிற்சியாளர்களுக்கான பயிற்சி மிகச் சிறப்பாக தொடங்கியுள்ளது. கிராமபுற சுகாதாரத்தை மேம்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

    திண்டுக்கல் மாவட்டத்தில் துப்புரவு, கழிவு சுத்திகரிப்புக்கான பணிகளில் ஏராளமானோர் பணிபுரிகின்றனர். ஊரக பகுதியில் 150 வீடுகளுக்கு ஒருவர் வீதம் 2,588 தூய்மை காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 961 தொகுதிகளில் 1,922 எண்ணிக்கை மக்கும் குப்பைகளை உரமாக்குவதற்கான உரக்குழிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    அனைத்து ஊராட்சிகளிலும் குப்பைகளை பிரித்தல் மற்றும் சேகரித்து வைப்பதற்கான கொட்டகை மற்றும் மண்புழு உரக் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நகர்புறத்திற்கு அருகாமையில் உள்ள 16 ஊராட்சிகளில் இயற்கை உரத் தயாரிப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கும், மக்காத குப்பைகளை வீடு வீடாக, பொது இடங்கள், சந்தை, நிறுவனங்களிலிருந்து சேகரித்து, பிரித்து, மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத மறுசுழற்சி செய்யதக்க குப்பைகளை விற்பனை செய்து வருவாய் ஈட்டுகின்றனர்.

    ஒவ்வொரு வருடமும் தூய்மைக் காவலர்களுக்கான சீருடைகள், பாதுகாப்பு உபகரணங்கள், தூய்மை பணி மேற்கொள்வதற்கான கருவிகள் வழங்கப்படுகின்றன. 306 கிராம ஊராட்சிகளுக்கு 3,503 குப்பை வண்டிகள், 3,313 குப்பைத் தொட்டிகள், 374 மின்கலன் வண்டிகள், 76 டிராக்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. நெகிழிக் கழிவுகளை அரவை இயந்திரம் மூலம் சிறுசிறு துகள்களாக அரைத்து தார் சாலைகள் அமைக்கவும், நெகிழி பொருட்கள் செய்வதற்கான கட்சா பொருளாகவும் மாற்றுகின்றனர். 14 ஊராட்சி ஒன்றியங்களில் 14 நெகிழிக்கழிவு மேலாண்மை அலகுகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

    கழிப்பறை பராமரிப்பு, தூய்மை பணிகளில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டாலும், அதனை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு இன்றி உள்ளனர். இப்பணியாளர்களின் சமூக அந்தஸ்து மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, யுனிசெப் ஆலோசகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் விபத்தை தடுக்க போக்குவரத்து-நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது
    • எஸ்.பி. ஷியாமளா தேவி வழங்கினார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு உபகரணங்கள் போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலை ரோந்து போலீசாரிடம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி சாலை போக்குவரத்து பாதுகாப்புக்காக இரும்பு தடுப்புகள் 89, ஒளிரும் பட்டைகள் 25, சோலார் ஒளிரும் விளக்குகள் 32 மற்றும் ஒளிரும் செங்குத்து கூம்புகள் 63 என மொத்தம் 184 முன்னெச்சரிக்கை சாலை பாதுகாப்பு உபகரணங்களை நகர, நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசாரிடம் வழங்கினார்.

    இந்த பாதுகாப்பு உபகரணங்கள் சாலை விபத்துகளை குறைக்கும் வகையில், தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் விபத்து அதிகம் நடைபெறும் இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் வைக்கப்படவுள்ளது. இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி நிருபர்களிடம் கூறியதாவது:-பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் இல்லாமல் பயணிப்பது, அதிவேகத்தில் பயணிப்பது, தவறான பாதையில் பயணிப்பது, நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பது, மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டுவது, அளவுக்கு அதிகமாக பொருட்களை ஏற்றி செல்வது என என பல்வேறு பிரிவுகளில் 24 ஆயிரத்து 230 வழக்குகள் பதிவு செய்து ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    சாலை விதிகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டியதாக 11 ஆயிரத்து 122 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.68 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டுடன் இந்த ஆண்டு இதுவரை நடந்த சாலை விபத்துகளுடன் ஒப்பிடும்போது 18 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி, இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேஷ் (தனிப்பிரிவு), மதுமதி (நகர போக்குவரத்து), சுப்பையா (நெடுஞ்சாலை போக்குவரத்து), சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலை ரோந்து போலீசார் கலந்து கொண்டனர்.

    • பாதுகாப்பு உபகரணங்களின்றி துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • மாவட்ட நிர்வாகம் இனிமேலாவது நடவடிக்கை எடுத்து துப்புரவு தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்க ளுடன் பணியாற்ற அறிவுறுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    மதுரை

    மனித கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்க ளை ஈடுபடுத்தக்கூடாது, போதிய பாதுகாப்பு உபகரணங்களின்றி சாக்கடை அள்ளுதல், கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் அதனை மீறி பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களின்றி பணியாற்றி வருகின்றனர்.

    இது தொடர்பாக கடந்த வாரம் மதுரை ஐகோர்ட்டு கடும் எச்சரிக்கை விடுத்தது. நீதிமன்ற உத்தரவுகளை மீறி தொழிலளர்கள் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டால் மாநகராட்சி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்திருந்தனர்.

    மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. பெரும்பாலான பகுதிகளில் பாதாள சாக்கடை வசதிகள் உள்ளன. இங்கு நாள்தோறும் அடைப்பு ஏற்பட்டு அதனை சரி செய்யும் பணியில் மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் கையுறை, முகக்கவசம் என எவ்வித பாதுகாப்பு உபகரணங்களின்றி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை பழைய குயவர்பாளையம் பகுதியில் இதுபோன்ற பணிகளில் ஈடுபட்ட துப்புரவு ஊழி யர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லா மல் பணியில் ஈடுபட்டனர். கோர்ட்டு எச்சரித்து இருந்த நிலையில் மதுரை மாநகராட்சியில் துப்பு ரவு தொழிலாளர்கள் இது போன்று பணியில் ஈடுபடுத்தப்பட்டது அதிர்ச்சி யை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் இனிமேலாவது நடவடிக்கை எடுத்து துப்புரவு தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்க ளுடன் பணியாற்ற அறிவுறுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    • அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.
    • “நம்ம ஊரு சூப்பரு” சிறப்பு விழிப்புணர்வு பிரசார வாகன பயணத்தை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணாி வட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியம், எஸ்.புதூர் ஊராட்சியில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில், "நம்ம ஊரு சூப்பரு" சிறப்பு விழிப்புணர்வு பிரசார வாகனம் மற்றும் இலவச நடமாடும் மருத்துவ மைய வாகனத்தினை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் தூய்மைப்ப ணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், மீண்டும் மஞ்சள் பை திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மஞ்சள் பை போன்றவைகளை வழங்கி, எஸ்.புதூர் ஊராட்சியில் உள்ள சீலப்ப நாயக்கர் ஊரணியை சுற்றியுள்ள பகுதிகளில் "நம்ம ஊரு சூப்பரு" திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நட்டு வைத்து, ஊரணியை சுற்றி மேற்கொள்ளப்படவுள்ள சுகாதார தூய்மைப் பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் "நம்ம ஊரு சூப்பரு" தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தலைமையில் ஏற்கப்பட்டது.

    இதில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பொன்.மணிபாஸ்கரன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.ராம்கணேஷ், அறக்கட்டளை மேலாண்மை இயக்குநர் நாராயணன், வொக்கார்ட் அறக்கட்டளை மருத்துவ இயக்குநர் ஸ்ரீராம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார், உதவி திட்ட இயக்குநர் விசாலாட்சி, ஒன்றியக்குழுத் தலைவர் விஜயாகுமரன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் வீரம்மாள், சிங்கம்புணரி வட்டாட்சியர் கயல்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, ஊராட்சி மன்றத்தலைவர் ராதாகிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர் ஸ்ரீகாந்த், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய பல்த்சர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×