search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "safety equipment"

    • கையுறைகள், முகக்கவசம், மழை கோட் வழங்கப்பட்டது
    • 70 பேர் பணியாற்றி வருகின்றனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் முதல் நிலை பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது.

    இந்த பேரூராட்சியில் தூய்மை பணிகளில் 70 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு கையுறைகள், முகக்கவசம், மழை கோட் உள்பட பாதுகாப்பு உபகரணங்களை அம்மூர் பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாதன் வழங்கினார்.

    அப்போது இளநிலை உதவியாளர் மனோகர், சுகாதார மேற்பார்வையாளர் வினோதினி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் விபத்தை தடுக்க போக்குவரத்து-நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது
    • எஸ்.பி. ஷியாமளா தேவி வழங்கினார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு உபகரணங்கள் போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலை ரோந்து போலீசாரிடம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி சாலை போக்குவரத்து பாதுகாப்புக்காக இரும்பு தடுப்புகள் 89, ஒளிரும் பட்டைகள் 25, சோலார் ஒளிரும் விளக்குகள் 32 மற்றும் ஒளிரும் செங்குத்து கூம்புகள் 63 என மொத்தம் 184 முன்னெச்சரிக்கை சாலை பாதுகாப்பு உபகரணங்களை நகர, நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசாரிடம் வழங்கினார்.

    இந்த பாதுகாப்பு உபகரணங்கள் சாலை விபத்துகளை குறைக்கும் வகையில், தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் விபத்து அதிகம் நடைபெறும் இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் வைக்கப்படவுள்ளது. இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி நிருபர்களிடம் கூறியதாவது:-பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் இல்லாமல் பயணிப்பது, அதிவேகத்தில் பயணிப்பது, தவறான பாதையில் பயணிப்பது, நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பது, மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டுவது, அளவுக்கு அதிகமாக பொருட்களை ஏற்றி செல்வது என என பல்வேறு பிரிவுகளில் 24 ஆயிரத்து 230 வழக்குகள் பதிவு செய்து ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    சாலை விதிகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டியதாக 11 ஆயிரத்து 122 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.68 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டுடன் இந்த ஆண்டு இதுவரை நடந்த சாலை விபத்துகளுடன் ஒப்பிடும்போது 18 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி, இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேஷ் (தனிப்பிரிவு), மதுமதி (நகர போக்குவரத்து), சுப்பையா (நெடுஞ்சாலை போக்குவரத்து), சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலை ரோந்து போலீசார் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.
    • “நம்ம ஊரு சூப்பரு” சிறப்பு விழிப்புணர்வு பிரசார வாகன பயணத்தை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணாி வட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியம், எஸ்.புதூர் ஊராட்சியில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில், "நம்ம ஊரு சூப்பரு" சிறப்பு விழிப்புணர்வு பிரசார வாகனம் மற்றும் இலவச நடமாடும் மருத்துவ மைய வாகனத்தினை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் தூய்மைப்ப ணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், மீண்டும் மஞ்சள் பை திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மஞ்சள் பை போன்றவைகளை வழங்கி, எஸ்.புதூர் ஊராட்சியில் உள்ள சீலப்ப நாயக்கர் ஊரணியை சுற்றியுள்ள பகுதிகளில் "நம்ம ஊரு சூப்பரு" திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நட்டு வைத்து, ஊரணியை சுற்றி மேற்கொள்ளப்படவுள்ள சுகாதார தூய்மைப் பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் "நம்ம ஊரு சூப்பரு" தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தலைமையில் ஏற்கப்பட்டது.

    இதில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பொன்.மணிபாஸ்கரன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.ராம்கணேஷ், அறக்கட்டளை மேலாண்மை இயக்குநர் நாராயணன், வொக்கார்ட் அறக்கட்டளை மருத்துவ இயக்குநர் ஸ்ரீராம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார், உதவி திட்ட இயக்குநர் விசாலாட்சி, ஒன்றியக்குழுத் தலைவர் விஜயாகுமரன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் வீரம்மாள், சிங்கம்புணரி வட்டாட்சியர் கயல்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, ஊராட்சி மன்றத்தலைவர் ராதாகிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர் ஸ்ரீகாந்த், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய பல்த்சர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×