search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவானி செல்லியாண்டியம்மன்"

    • விமான கோபுரங்கள் திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது.
    • மஹா கணபதி ஹோமம், வாஸ்து பூஜை நடைபெற்றது.

    பவானி:

    பவானி நகர மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் செல்லாண்டி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு விமான கோபுரங்கள் திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது.

    தொடர்ந்து சங்கமே ஸ்வரர் கோவில் சிவா சிவாச்சாரியார், உதயபிரகாஷ் சிவாச்சாரியார் குழுவினர் மூலம் விநாயகர் பூஜை, சங்கல்பம், மஹா கணபதி ஹோமம், வாஸ்து பூஜை நடைபெற்றது.

    இதை தொடர்ந்து 2-ம் கால பூஜை தொடங்கி பாலஸ்தாபன பூஜைகள், மஹா தீபாராதனை நடை பெற்று திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது.

    இவ்விழாவில் பவானி நகர தி.மு.க. செயலாளர் ப.சீ.நாகராசன், நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோ வன், நகர்மன்ற துணை தலைவர் மணி, அ.தி.மு.க. நகர செயலாளர் சீனிவாசன், முன்னாள் நகர செயலாளர் கிருஷ்ண ராஜ், பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலா ளர் தினேஷ்குமார் நாயகர்,

    செல்லியாண்டியம்மன் கோவில் திருப்பணி விழா குழுவினர் மகேந்திரன், சண்முகசுந்தரம், பி.என்.ஆர்.மனோகரன், செல்லியாண்டியம்மன் கோவில் சரவணன், தி.மு.க. தலைமை பேச்சாளர் கண்ணன், ஊர் கவுண்டர், ஊர் கொத்துகாரர், 37 சமூக கட்டளைதாரர்கள், பொதுமக்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    பவானி செல்லியாண்டி யம்மன், மாரியம்மன் கோவில் உள்பட நரின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் ஆண்டு தோறும் மாசி திருவிழா மிக விமர்ச்சியாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் கோவில் திருப்பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி பவானி செல்லியாண்டியம்மன், மாரியம்மன், பட்டத்தரசியம்மன், எல்லையம்மன், மேட்டு தெரு மாரியம்மன், வர்ணபுரம் மாரியம்மன் கோவில்களில் இந்த ஆண்டு மற்றும் திரப்பணிகள் முடியும் வரை மாசி திருவிழா நடை பெறாது என இந்து சமய அறநிலையத்துறை, விழா குழுவினர் மற்றும் 37 கட்டளைதாரர்கள் முன்னிலையில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்க ப்பட்டது.

    ×