search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிவாசல் திறப்பு"

    • பள்ளிவாசல் திறப்பு விழா; நவாஸ்கனி எம்.பி. பங்கேற்றார்.
    • ஏற்பாடுகளை எம்.ஆர்.எப், வாலிபர்கள் மற்றும் 18 வாலிபர்கள் ஜகாத் கமிட்டியினர் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலை தெருவில் 18 வாலிபர்கள் தர்கா உள்ளது. இங்கு புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நடந்தது. ஓடக்கரை பள்ளி ஜமாத் மற்றும் புதுப்பள்ளி ஜமாத் தலைவர் யூசுப் சாகிப், முஸ்லீம் சங்க செயலாளர் சதக் அன்சாரி, துணைத் தலைவர் முஜீபுர் ரஹ்மான், அனைத்து ஜமா அத் கூட்டமைப்பு தலைவர் ஹாமீது, ஜகாத் கமிட்டி மூத்த நிர்வாகி ஜப்பார், சிகந்தர் பாட்ஷா ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஓடக்கரை பள்ளி ஜமாத் பரிபாலன கமிட்டி நிர்வாகி சதக் இல்யாஸ் முன்னிலை வகித்தனர். ஜகாத் கமிட்டி கவுரவ ஆலோசகர் காதர் ஷாஹீப் வரவேற்றார். எழுத்தாளர் முகம்மது நஜீம் மரிக்கா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக நவாஸ்கனி எம்.பி., வக்பு வாரிய சேர்மன் அப்துல் ரஹ்மான், முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான் பங்கேற்றனர்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. அசன் அலி, ஏஜே கமால், உமர், மாவட்ட தலைமை காஜி சலாஹுத்தின் ஆலிம், 18 வாலிபர்கள் ஜகாத் கமிட்டி தலைவர் ஜாகிர் உசைன், கீழக்கரை உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்க தலைவர் யூசுப் சாஹிப், சங்க மேலாளர் அப்துல் ரசாக், குதுபுதீன் ராஜா, பசீர்தீன் கலந்து கொண்டனர். ஜக்காத் கமிட்டியின் பொருளாளர் சீனி முகம்மது நன்றி கூறினார்.முடிவில் 1000 கிலோ அரிசியில் நெய் சோறு தயார் செய்து கந்தூரி உணவாக வழங்கினர். விழா ஏற்பாடுகளை எம்.ஆர்.எப், வாலிபர்கள் மற்றும் 18 வாலிபர்கள் ஜகாத் கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • அருப்புக்கோட்டையில் புதுப்பிக்கப்பட்ட பள்ளிவாசல் திறக்கப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை நல்லூர் முகைதீன் ஆண்டவர் ஜும்ஆ பள்ளி வாசல், ஜமாத்தார்களால் புதுப்பிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. முன்னாள் ஜமாத் தலைவர் முகமது சிக்கந்தர் தலைமை தாங்கினார்.

    நல்லூர் முகைதீன் ஆண்டவர் ஜும்ஆ பள்ளி வாசல் செயலாளர் சேக் உதுமான் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்- வக்புவாரிய தலைவர் அப்துல் ரகுமான் கலந்து கொண்டார். பள்ளிவாசல் கல்வெட்டை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் திறந்து வைத்து பேசினர்.

    நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட அரசு ஹாஜி நவாஸ் கான்மஹ்லரி, துணை இமாம் அபூசவூது, தலைமை இமாம் நஸீர் அகமதுஆலிம்பைஜி, பொருளாளர் முகமது சிக்கந்தர், கட்டிடகமிட்டி சாகுல்ஹமீது, செய்யது மசூது, அப்துல்காதர், நிர்வாகிகள் சிக்கந்தர்பாட்ஷா, முகமது உசேன், துணைதலைவர் காதர் மைதீன், முன்னாள் ஒன்றியசேர்மன் சுப்பாராஜ், தி.மு.க. தலைமை செயற் குழு உறுப்பினர் சாகுல் ஹமீது. நகர்மன்ற துணைதலை வர் பழனிசாமி, நகர தி.மு.க. செயலாளர் ஏ.கே.மணி, ஒன்றிய சேர்மன் சசிகலா பொன் ராஜ், ஒன்றிய செயலா ளர்கள் பால கணேசன், பொன் ராஜ், மாவட்ட இளைஞ ரணிதுணை அமைப்பாளர்கள் பாபுஜி, பால சந்தர், மாவட்ட பிரதிநிதி சிவசங்கரன், கவுன்சிலர்கள் அப்துல்ரஹ்மான், அகமது யாசீர், ஜோதிராமலிங்கம், இளங்கோ உள்பட பலர்கலந்து கொண்டனர்.

    தமிழ் மாநில ஜமத்துல் உலமா சபை தலைவர் காஜாமுயினுத்தின் ஆலிம் பாகவி பேசினார்.அல்அமீன் முஸ்லீம் மேல் நிலைப்பள்ளி தாளாளர் காஜாமைதீன் நன்றி கூறினார்.

    ×