search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுப்பிக்கப்பட்ட பள்ளிவாசல் திறப்பு-அமைச்சர்கள் பங்கேற்பு
    X

    புதுப்பிக்கப்பட்ட பள்ளிவாசல் திறப்பு-அமைச்சர்கள் பங்கேற்பு

    • அருப்புக்கோட்டையில் புதுப்பிக்கப்பட்ட பள்ளிவாசல் திறக்கப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை நல்லூர் முகைதீன் ஆண்டவர் ஜும்ஆ பள்ளி வாசல், ஜமாத்தார்களால் புதுப்பிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. முன்னாள் ஜமாத் தலைவர் முகமது சிக்கந்தர் தலைமை தாங்கினார்.

    நல்லூர் முகைதீன் ஆண்டவர் ஜும்ஆ பள்ளி வாசல் செயலாளர் சேக் உதுமான் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்- வக்புவாரிய தலைவர் அப்துல் ரகுமான் கலந்து கொண்டார். பள்ளிவாசல் கல்வெட்டை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் திறந்து வைத்து பேசினர்.

    நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட அரசு ஹாஜி நவாஸ் கான்மஹ்லரி, துணை இமாம் அபூசவூது, தலைமை இமாம் நஸீர் அகமதுஆலிம்பைஜி, பொருளாளர் முகமது சிக்கந்தர், கட்டிடகமிட்டி சாகுல்ஹமீது, செய்யது மசூது, அப்துல்காதர், நிர்வாகிகள் சிக்கந்தர்பாட்ஷா, முகமது உசேன், துணைதலைவர் காதர் மைதீன், முன்னாள் ஒன்றியசேர்மன் சுப்பாராஜ், தி.மு.க. தலைமை செயற் குழு உறுப்பினர் சாகுல் ஹமீது. நகர்மன்ற துணைதலை வர் பழனிசாமி, நகர தி.மு.க. செயலாளர் ஏ.கே.மணி, ஒன்றிய சேர்மன் சசிகலா பொன் ராஜ், ஒன்றிய செயலா ளர்கள் பால கணேசன், பொன் ராஜ், மாவட்ட இளைஞ ரணிதுணை அமைப்பாளர்கள் பாபுஜி, பால சந்தர், மாவட்ட பிரதிநிதி சிவசங்கரன், கவுன்சிலர்கள் அப்துல்ரஹ்மான், அகமது யாசீர், ஜோதிராமலிங்கம், இளங்கோ உள்பட பலர்கலந்து கொண்டனர்.

    தமிழ் மாநில ஜமத்துல் உலமா சபை தலைவர் காஜாமுயினுத்தின் ஆலிம் பாகவி பேசினார்.அல்அமீன் முஸ்லீம் மேல் நிலைப்பள்ளி தாளாளர் காஜாமைதீன் நன்றி கூறினார்.

    Next Story
    ×