search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பறவை காய்ச்சல்"

    • பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பண்ணைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது.
    • வயநாடு பகுதியில் இருந்து எருமாடு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு கறிக்கோழிகள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    கேரள மாநிலம் கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது.

    இதையடுத்து அரசு உத்தரவின் பேரில் கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் உள்ள கோழி, வாத்து பண்ணைகளில் சுகாதாரம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையினர் ஆய்வு செய்து, 8 ஆயிரம் கோழி மற்றும் வாத்துகளை அழித்தனர்.

    இதற்கிடையே பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பண்ணைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது.

    கோட்டயம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள், சரக்கு லாரிகள் கூடலூர் வழியாக கர்நாடகா மற்றும் ஊட்டிக்கு இயக்கப்படுகிறது.

    இதனால் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க மாநில எல்லைகள் வழியாக வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தி கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

    கூடலூர் பகுதியில் நாடுகாணி, பாட்டவயல், சோலாடி, நம்பியார்குன்னு உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கால்நடை பராமரிப்புத்துறையினர் முகாமிட்டு கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.

    இதுதவிர வயநாடு பகுதியில் இருந்து எருமாடு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு கறிக்கோழிகள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் லவ் பேர்ட்ஸ் போன்ற பறவை இனங்களை எடுத்து வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பண்ணைகளிலும் கால்நடை பராமரிப்புத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    • பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாக தமிழக-கேரள எல்லையான திருப்பூர் மாவட்டம் உடுமலை-மூணார் சாலையில் நிரந்தர முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
    • மழை, பனி காலம் தொடங்கி உள்ளதால் பறவை காய்ச்சல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம், தாராபுரம், உடுமலை பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு கறிக்கோழி, முட்டை மற்றும் கோழித்தீவனங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அதேப்போல் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வாத்துக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இந்தநிலையில் கேரள மாநிலம் கோட்டயத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாக தமிழக-கேரள எல்லையான திருப்பூர் மாவட்டம் உடுமலை-மூணார் சாலையில் நிரந்தர முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கால்நடை மருத்துவக்குழுவினர் ௨௪ மணி நேரமும் பணியில் ஈடுபட்டு கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் 9/6 செக்போஸ்ட் மற்றும் சின்னார் பகுதியில் சோதனைச்சாவடி அமைத்து கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு மருந்து தெளித்த பின்னரே அனுமதித்து வருகின்றனர்.

    இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் கூறுகையில், கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பரவி வந்த பறவை காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஓரளவு கட்டுக்குள் வந்தது. தற்போது மழை, பனி காலம் தொடங்கி உள்ளதால் பறவை காய்ச்சல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது.

    இதனை கட்டுப்படுத்த மாநில எல்லை சோதனைச்சாவடிகளில் உஷார்படுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து உடுமலை வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளித்த பின்னரே அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக கால்நடைத்துறை சார்பில் 3 குழு அமைத்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம் என்றார்.

    • பறவை காய்ச்சல் பாதிப்புக்குள்ளான வாத்து, கோழிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
    • பண்ணைகளில் இருந்து பறவை இறைச்சி மற்றும் முட்டைகள் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் ஏராளமான கோழி, வாத்து பண்ணைகள் உள்ளன.

    இந்த பண்ணைகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை தொடர்ந்து இப்பண்ணைகளில் வளர்க்கப்பட்ட பறவைகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.

    மேலும் அங்கு தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்களை யொட்டி இந்த பண்ணைகளில் ஏராளமான பறவைகள் வளர்க்கப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் இங்குள்ள சில பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழி, வாத்துக்களுக்கு மீண்டும் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் கால்நடை துறையினர் மற்றும் சுகாதார துறையினர் இந்த பண்ணைகளில் ஆய்வு நடத்தினர். இதில் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது.

    இதையடுத்து பறவை காய்ச்சல் பாதிப்புக்குள்ளான வாத்து, கோழிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி இன்று கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சுமார் 8 ஆயிரம் வாத்து, கோழிகள் இன்று அழிக்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறையினரும் செய்துள்ளனர்.

    மேலும் இந்த பண்ணைகளில் இருந்து பறவை இறைச்சி மற்றும் முட்டைகள் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்கள் வரும் நிலையில் பண்ணைகளில் வளர்க்கப்பட்ட பறவைகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது பண்ணையாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    • ஆய்ச்சி மாகாணத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
    • கோஹிமா மாகாணத்திலும் பறவை காய்ச்சல் காரணமாக 34 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    டோக்கியோ:

    ஜப்பானின் ஆய்ச்சி மாகாணத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் கோழிகள் இறந்தன. இதை தொடர்ந்து இறந்துபோன கோழிகளை பரிசோதித்ததில் அவற்றில் பெரும்பாலானவை பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. இது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஆய்ச்சி மாகாணத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். பறவை காய்ச்சல் மேலும் பரவுவதை தடுக்கும் விதமாக மாகாணம் முழுவதிலும் சுமார் 3 லட்சத்து 10 ஆயிரம் கோழிகளை அழிக்க அதிகாரிகள் முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர்.

    இதே போல் கோஹிமா மாகாணத்திலும் பறவை காய்ச்சல் காரணமாக 34 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஜப்பானில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் இருந்து பறவை காய்ச்சல் பரவி வருவதும் இதுவரை 33 லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    • பறவைக் காய்ச்சலால் கேரளாவில் மட்டுமே பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் பாதிப்பு இல்லை.
    • தமிழகம்-கேரள மாநில எல்லையோரம் உள்ள கோழிப் பண்ணைகளில் கால்நடை டாக்டர்கள் ஆய்வு செய்து கோழிகளின் மாதிரிகளை சேகரித்து வருகின்றனர்.

    கோவை:

    கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள பண்ணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 1,500 வாத்துகள் திடீரென உயிரிழந்தன. வாத்துகளுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் பறவை காய்ச்சல் இருந்தது உறுதியானது.

    இதனால், அங்கு மேலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளை அழிக்க அந்த மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், கோவை-கேரள எல்லைகளான வாளையாறு, வேலந்தாளம், முள்ளி, ஆனைக்கட்டி, பட்டிசாலை, தோலம்பாளையம் உள்பட 12 சோதனைச்சாவடிகளில் கால்நடை டாக்டர்கள் தலைமையில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும், கோவையில் உள்ள கோழிப்பண்ணைகளிலும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.கேரளாவிற்கு கோழி, முட்டை, தீவனங்கள் ஏற்றிச்சென்று திரும்ப வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி அடித்து தொற்று நீக்கம் செய்யப்படுவதோடு, வாகன எண்கள், செல்லும் முகவரி பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பொள்ளாச்சியில் தமிழகம்-கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள மீனாட்சிபுரம், செமணாம்பதி, கோபாலபுரம், நடுப்புணி, ஜமீன் காளியாபுரம், வடக்குகாடு, வீரப்பகவுண்டன்புதூர் ஆகிய சோதனைச் சாவடிகளில் கால்நடை பராமரிப்புத்துறை டாக்டர்கள் அடங்கிய குழுவினர் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களின் டயர்களிலும் கிருமி நாசினி தெளித்த பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதித்தனர்.

    இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறையினர் கூறியதாவது:-

    பறவைக் காய்ச்சலால் கேரளாவில் மட்டுமே பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் பாதிப்பு இல்லை. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் வரும் வாகனங்களின் டயர்களில் ரசாயன மருந்து கலவை தெளிக்கப்படுகிறது.

    தமிழகம்-கேரள மாநில எல்லையோரம் உள்ள கோழிப் பண்ணைகளில் கால்நடை டாக்டர்கள் ஆய்வு செய்து கோழிகளின் மாதிரிகளை சேகரித்து வருகின்றனர். அனைத்து கோழிப்பண்ணைகளும் கால்நடைத் துறையினரின் கண்காணிப்பில் உள்ளன என்றனர்.

    • நாமக்கல் பகுதியிலும் கோழிப்பண்ணைகளில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
    • இன்று 5-வது நாளாக கோழிப்பண்ணைகளுக்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி அளிக்கப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 1100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 5 கோடிக்கும் மேல் முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வெளி நாடுகள், வடமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக கேரளாவுக்கு மட்டும் தினசரி 1 கோடி முட்டைகள் அனுப்பப்பட்டு வருகிறது. முக்கிய விற்பனை மையமாக விளங்கி வருகிறது.

    இந்த நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் வாழுத்தனம் நகராட்சி பகுதியில் வாத்துகளை பறவை காய்ச்சல் நோய் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே கேரளா முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    இதையொட்டி நாமக்கல் பகுதியிலும் கோழிப்பண்ணைகளில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இன்று 5-வது நாளாக கோழிப்பண்ணைகளுக்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி அளிக்கப்படுகிறது. மேலும் முன்னெச்சரிக்கையாக கோழிகளுக்கு தடுப்பூசி போடுதல் பணிகளும் நடைபெற்று வருகின்றன. பணியாளர்கள் முககவசம், கையுறை உள்ளிட்டவைகள் அணிந்து பணிபுரிகின்றனர். வெளியிடங்களில் இருந்து வரும் முட்டை அட்டைகளை கிருமிநாசினி தெளித்து அதன் பிறகு கோழிப்பண்ணைக்குள் அனுமதிக்கின்றனர்.

    கோழிப்பண்ணையாளர்கள் எக்காரணம் கொண்டும் முட்டை, தீவனம், தீவன மூலப்பொருட்கள், கோழிக்குஞ்சுகள், கோழி குப்பை போன்ற பொருட்களை அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து கண்டிப்பாக கொள்முதல் செய்யக்கூடாது என்றும், கோழிப்பண்ணைகளில் உயிரி பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து கோழிகளுக்கு நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை நாமக்கல் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல அலுவலகம் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து சென்று கொண்டிருக்கின்றன.
    • சமீப காலமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புளியரை வழியாக பெரும்பான்மையான வாகனங்களில் இறைச்சி கழிவுகள் ஏற்றி வரப்பட்டு தமிழகத்தில் கொட்டப்படுகிறது.

    செங்கோட்டை:

    கேரளாவில் பறவை காய்ச்சல் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துக்கள் அடுத்தடுத்து இறந்தன. இந்த பீதியால் தமிழக-கேரள எல்லைகள் வழியாக வரும் வாகனங்களை பரிசோதித்து அவற்றுக்கு கிருமிநாசினி தெளிக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து சென்று கொண்டிருக்கின்றன. சமீப காலமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புளியரை வழியாக பெரும்பான்மையான வாகனங்களில் இறைச்சி கழிவுகள் ஏற்றி வரப்பட்டு தமிழகத்தில் கொட்டப்படுகிறது.

    இதனால் சோதனை சாவடியில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது பறவை காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ள நிலையில் கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்களை கண்காணிக்க சோதனைச்சாவடியில் உரிய சோதனைகள் நடத்த வேண்டும் என்றும், கால்நடைத்துறையினர் சுழற்சி அடிப்படையில் அங்கு முகாமிட்டு பணியாற்ற வேண்டும் எனவும் கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டார்.

    அதன்படி இன்று காலை புளியரை சோதனை சாவடியில் கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் பொன்னுவேல் தலைமையில் கால்நடைத்துறை மருத்துவக் குழுவினர் முகாமிட்டனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த குழுவில் கால்நடை மருத்துவர் ஜெயபால்ராஜ், ஆய்வாளர், பராமரிப்பு உதவியாளர், கிருமிநாசினி தெளிப்பாளர்கள் 2 பேர் பணியில் உள்ளனர்.

    அவர்கள் கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். அந்த பகுதியில் பிளீச்சிங் பவுடர் உள்ளிட்டவையும் தூவப்பட்டுள்ளன.

    • பண்ணைகளில் வளர்க்கப்படும் வாத்து, கோழிகள் அனைத்தையும் உடனடியாக அழிக்க மாவட்ட கலெக்டர் கிருஷ்ண தேஜா உத்தரவிட்டார்.
    • கோட்டயம் பகுதியில் உள்ள சில பன்றி பண்ணைகளிலும் சுகாதார குழுவினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் ஏராளமான பறவை பண்ணைகள் உள்ளன. இதில் ஹரிப்பாடு பகுதியில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் சில பறவைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கால்நடை துறை அதிகாரிகள் அங்கு சென்று பறவைகளின் மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு நடந்த சோதனையில் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் வாத்து, கோழிகள் அனைத்தையும் உடனடியாக அழிக்க மாவட்ட கலெக்டர் கிருஷ்ண தேஜா உத்தரவிட்டார்.

    அதன்படி நேற்று ஆலப்புழா பகுதியில் உள்ள பண்ணைகளில் இருந்து சுமார் 20 ஆயிரம் கோழி, வாத்துக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. மேலும் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு ஏதேனும் நோய் பாதிப்பு இருக்கிறதா? சுகாதார துறையினர் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே கோட்டயம் பகுதியில் உள்ள சில பன்றி பண்ணைகளிலும் சுகாதார குழுவினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேலும் இந்த பகுதியில் ஆப்பிரிக்கன் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறியும் பணியும் நடந்து வருகிறது. இதுதொடர்பான தகவலை அடுத்து 7 பேர் கொண்ட மத்திய சுகாதார குழுவினர் ஆலப்புழா சென்றுள்ளனர். அவர்கள் அங்கு ஆய்வு நடத்த உள்ளனர்.

    • தமிழகத்தில் சுமார் 5 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
    • தினமும் சுமார் ஒரு கோடி முட்டைகள் மற்றும் அதிக அளவில் கோழிகள் விற்பனைக்காக கேரள மாநிலத்திற்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    நாமக்கல்:

    இந்தியாவில் அடிக்கடி பறவை காய்ச்சல் நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. பறவை காய்ச்சல் நோய் தாக்கம் ஏற்படும் போது ஆயிரக்கணக்கான கோழிகள் பாதிக்கப்படுவதுடன் கோழி மற்றும் முட்டை விற்பனை வீழ்ச்சி அடைந்து கோழிப்பண்ணையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

    இந்த நிலையில் கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த வாரம் 1800 வாத்துகள் திடீரென இறந்தன. வாத்துக்கள் ஒரே நேரத்தில் இருந்ததால் கால்நடை பராமரிப்பு துறையினர் அதன் மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கின நோய் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவில் பறவை காய்ச்சல் தாக்கத்தினால் அவை இறந்தது உறுதி செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஆலப்புழா மாவட்டம் பாலுதனம் நகராட்சி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு, அங்கிருந்து பறவை காய்ச்சல் வேறு இடங்களுக்கு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் அங்கிருந்து கோழிகள் வெளியிடங்களுக்கு அனுப்பப்படாமல் இருக்க வெளியூர் வாகனங்கள் அங்கு செல்லாமலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள கோழி பண்ணையாளர்கள் கலக்கமடைந்து உள்ளனர்.

    தமிழகத்தில் சுமார் 5 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இங்கிருந்து தினமும் சுமார் ஒரு கோடி முட்டைகள் மற்றும் அதிக அளவில் கோழிகள் விற்பனைக்காக கேரள மாநிலத்திற்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    கேரளாவில் உறுதி செய்யப்பட்டுள்ள பறவை காய்ச்சலால், தமிழகத்தில் கோழிப்பண்ணை தொழிலில் பாதிப்பு ஏற்படும் என நாமக்கல் கோழி பண்ணையாளர்கள் கருதுகிறார்கள். இதனால் கோழி பண்ணைகளுக்கு வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அதன் பின்னே நாமக்கல்லுக்குள் அனுமதிக்கப்படுகின்றன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழி பண்ணைகளுக்கு வரும் வாகனங்கள் எங்கிருந்து வருகின்றன என்பது குறித்தும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை கடந்த சில நாட்களாக ரூ.119-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.13 குறைத்து உள்ளனர். இதனால் கறிக்கோழி விலை ஒரு கிலோ ரூ.106-ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.

    முட்டை கொள்முதல் விலை 500 காசுகளாகவும், முட்டை கோழி விலை ரூ.95 ஆகவும் நீடிக்கிறது. இனிவரும் நாட்களில் பறவை காய்ச்சல் தமிழகத்திலும் பரவினால் கறிக்கோழியின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது. இதனால் பண்ணையாளர்கள் தவித்து வருகிறார்கள்.

    • ஆலப்புழா மாவட்ட கலெக்டர் கிருஷ்ண தேஜா தலைமையில் சுகாதார துறை அதிகாரிகளின் அவசர கூட்டம் நடைபெற்றது.
    • நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட பண்ணைகளில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து பண்ணைகளில் வளர்க்கப்படும் பறவைகளையும் உடனடியாக கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் ஏராளமான கோழி, வாத்து பண்ணைகள் உள்ளன.

    இங்கு வளர்க்கப்படும் பறவைகளுக்கு அடிக்கடி நோய் பாதிப்பு ஏற்படுவது வழக்கம். அதனை கால்நடைதுறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் உள்ள சில பண்ணைகளில் வளர்க்கப்பட்ட வாத்துக்களுக்கு ஏவியன் புளூ எனப்படும் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    உடனடியாக அந்த பண்ணைகளில் சுகாதார துறையினர் மற்றும் கால்நடை துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும் நோய் பாதிப்புக்கு ஆளான பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போபாலில் உள்ள தேசிய ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அங்கு நடந்த பரிசோதனையில் வாத்துக்களுக்கு பறவை காய்ச்சல் இருப்பது உறுதியானது.

    இதையடுத்து ஆலப்புழா மாவட்ட கலெக்டர் கிருஷ்ண தேஜா தலைமையில் சுகாதார துறை அதிகாரிகளின் அவசர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட பண்ணைகளில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து பண்ணைகளில் வளர்க்கப்படும் பறவைகளையும் உடனடியாக கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    அதன்படி சுமார் 20,471 வாத்துக்கள், கோழிகள் கொல்லப்பட உள்ளன. இதற்கான நடவடிக்கைகளை ஆலப்புழா மாவட்ட நிர்வாகமும், ஹரிபாடு பேரூராட்சியும் மேற்கொண்டுள்ளன.

    ×