search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பறக்கும் ரெயில் திட்டம்"

    வேளச்சேரி-செயிண்ட் தாமஸ் வரை பறக்கும் ரெயில் திட்டம் நீட்டிப்பு பணி 2011-ல் தொடங்கப்பட்டது. இதில் 500 மீட்டர் நிலம் கையப்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது. #FlyingTrainProject
    சென்னை:

    சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரெயில் சேவை தற்போது நடந்து வருகிறது. பறக்கும் ரெயிலில் தினமும் 50 ஆயிரம் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் பறக்கும் ரெயில் திட்டத்தை வேளச்சேரி- செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தன.

    தெற்கு ரெயில்வே, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், சென்னை மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து பறக்கும் ரெயில் திட்டத்துக்கான நில ஆர்ஜித பணிகளில் ஈடுபட்டு வந்தது.

    நிலம் கையகப்படுத்துவதில் அதிகாரிகளுக்கும், குடியிருப்பு வாசிகளுக்கும் இடையே பிரச்சனைகள் உருவானது. நிலத்துக்கு வழிகாட்டி மதிப்பை விட கூடுதல் பணம் கேட்டு குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    2017-ம் ஆண்டு வழிகாட்டி மதிப்பு படி சதுர அடிக்கு ரூ.3,151 வழங்க அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் சதுர அடிக்கு ரூ.4,500 வழங்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் கேட்டு வந்தனர்.

    இதுகுறித்து அதிகாரிகள், குடியிருப்பு வாசிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டது. 40 சதவீதம் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் அதிகாரிகள் மீண்டும் குடியிருப்பு வாசிகளிடம் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். வருகிற வியாழக்கிழமை இந்த பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.

    பறக்கும் ரெயில் திட்டம் 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2004-ல் திருவான்மியூர் வரை நீட்டிக்கப்பட்டது. 2007-ல் வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டது.

    வேளச்சேரி-செயிண்ட் தாமஸ் வரை பறக்கும் ரெயில் திட்டம் நீட்டிப்பு பணி 2011-ல் தொடங்கப்பட்டது. இதில் 500 மீட்டர் நிலம் கையப்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    நிலம் கையகப்படுத்துவது குறித்து குடியிருப்புவாசிகளிடம் மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. வருகிற வியாழக்கிழமை இந்த பேச்சுவார்த்தை நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #FlyingTrainProject
    வேளச்சேரி - தோமையார் மலை பறக்கும் ரெயில் திட்டம் விரைந்து முடிக்கப்படும் என்று சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் இன்று ஆலந்தூர் எம்.எல்.ஏ. தா.மோ.அன்பரசன் பறக்கும் ரெயில் திட்டம் எப்போது முழுமை அடையும் என்றார். மயிலாப்பூரில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரெயில் திட்டத்தை 2006-ம் ஆண்டு கருணாநிதி தொடங்கி வைத்தார்.

    அந்த விழாவில் வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை 3 கி.மீ. தூரம் பறக்கும் ரெயில் திட்டத்தை நீட்டித்து தரப்படும் என அறிவித்தார். அதன்படி பணிகள் நடைபெற்றது. தடையாக இருந்த ஆதம்பாக்கம் பகுதியில் இருந்த 129 குடிசைகள் அப்புறப்படுத்தி வேலைகள் நடைபெற்றன.

    இதில் 2½ கி.மீ. தூரத்துக்கு தி.மு.க. ஆட்சியில் பணிகள் முடிந்துவிட்டது. ½ கிலோ மீட்டர் தூரத்திற்கு தூண்கள் அமைக்காமல் 8 வருடமாக திட்டம் முடங்கியுள்ளது. இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினால் தென்னக ரெயில், பறக்கும் ரெயில், மெட்ரோ ரெயில் ஆகிய 3 ரெயில்களும் பரங்கிமலையில் ஒரே இடத்துக்கு வரும். இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைவார்கள். எனவே ½ கி.மீட்டர் தூர பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.

    இதற்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

    வேளச்சேரி-புனித தோமையார் மலை பறக்கும் ரெயில் விரிவாக்க திட்டம் 2008-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 5½ கி.மீட்டர் தூரத்தில் 3½ கி.மீட்டர் தூரம் போடப்பட்டுவிட்டது. மீதமுள்ள 1½ கி.மீட்டர் நிலம் கையகப்படுத்துவது சம்பந்தமான வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ளது.

    நில உரிமையாளர்கள் இழப்பீடு போதாது என்று வழக்கு தொடர்ந்ததால் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இப்போது விசாரணை முடிவுற்றுள்ளது. இறுதி தீர்ப்பு வந்தவுடன் மனுதாரர்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்கியதும் பணிகள் விரைந்து முடிக்கப்படும்’’ என்றார். #TNAssembly #OPanneerselvam
    ×