search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பருவகால தொற்றுகள்"

    • சளி, இருமல் ஆகியவை பருவ காலங்களில் ஏற்படும் தொற்று.
    • தேன் எடுத்துக் கொள்வது சளி, இருமலைக் குறைக்கும்.

    சளி, இருமல் ஆகியவை பருவ காலங்களில் ஏற்படும் தொற்றுக்களால் உண்டாகும். குறிப்பாக வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்கும்போது அவை முதலில் பாதிப்பது சுவாச மண்டலத்தை தான். சுவாச மண்டலங்களில் தொற்றுக்கள் ஏற்படும் போதுதான் தீராத சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தொற்று ஏற்பட்ட பிறகு மருந்து எடுத்துக் கொள்வதை விட ஆரம்பத்திலேயே உணவுகளின் வழியாக, இயற்கையான முறையில் சரிசெய்து கொள்ள முயற்சி செய்வது தான் நல்லது.

    * துளசியை இஞ்சியுடன் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து பின்னர் அதில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வர சளி, இருமல் தொல்லை சரியாகும்.

    * தேன் எடுத்துக் கொள்வது சளி, இருமலைக் குறைக்கும் வேலையைச் செய்யும்.

    * ஒரு ஸ்பூன் இஞ்சி சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து காலை, இரவு என இரண்டு வேளைகளில் சாப்பிட்டு வர சளி, இருமல் கட்டுக்குள் வரும்

    * லவங்கப்பட்டையில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்து இருக்கின்றன. லவங்கப்பட்டையை எடுத்துக் கொள்ளும்போது நோய் எதிர்ப்பு ஆற்றல் பலப்படும்.

    * லவங்கப்பட்டையின் பொடியுடன் தேன் கலந்து எடுத்துக் கொண்டாலும் சளி, இருமல் பிரச்சினை குறையும்.

    * லவங்கப்பட்டை பொடியுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ஒரு டம்ளராக சுண்டவிட்டு டீயாக எடுத்துக் கொள்ளும்போது சளி, இருமல், காய்ச்சல் தீருவதோடு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    * சீந்தில் பல நூறு நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் கொண்டது. இந்த சீந்தில் கொடியை பயன்படுத்தி சளி, காய்ச்சல். வைரஸ் தொற்றுக்கள் பருவ கால தொற்று நோய்களை தீர்க்க முடியும்.

    * சீந்தில் கொடியின் சாறை உட்கொள்வதன் மூலம் பருவ கால தொற்றுக்களால் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தும் சரியாகும்.

    ×