search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிசுகள் வழங்கும் விழா"

    • மாணவ, மாணவிகளுக்கு தங்க நாணயங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • விழாவிற்கு பள்ளியின் நிறுவனர் மணி தலைமை தாங்கி, தங்க நாணயங்களை வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பாரத் இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில் 10-ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்க நாணயங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு பள்ளியின் நிறுவனர் மணி தலைமை தாங்கி, தங்க நாணயங்களை வழங்கினார்.

    அதன்படி 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளான அஜய், ஜெயப்பிரகாஷ், ஹரிகரன், வைஷ்ணவி, ஷிரியாஸ்ரீ, ஜோசிகா ஹரிணி, அப்ரோஸ், பிரதீப், பிரியதர்ஷன் ஆகிய மாணவ, மாணவிகள் முதல் திருப்புதல் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தங்கநாணயங்கள் பரிசாக பெற்றனர்.

    தங்க நாணயங்கள் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் நிறுவனர் மணி, தாளாளர் கிருஷ்ணவேணி மணி, பள்ளியின் செயலாளர் டாக்டர் சந்தோஷ், இயக்குனர் உஷா சந்தோஷ், பள்ளியின் முதல்வர் ஹரிநாத் ஆகியோர் பாராட்டினார்கள்.

    • குழந்தைகளின் திறமைகளை கண்டறிந்து ஊக்குவிக்கும் பொருட்டு ஆன்லைன் வழியாக போட்டி நடைபெற்றது.
    • போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தாம்பட்டி விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் குழந்தைகளின் திறமைகளை கண்டறிந்து ஊக்குவிக்கும் பொருட்டு ஆன்லைன் வழியாக போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 65 ஊர்களை சேர்ந்த குழந்தைகள் போட்டியிட்டனர்.

    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு விழா ஊட்டி சேரிங் கிராஸில் உள்ள ஹார்ட்டிகள்சர் காம்ப்ளெக்ஸில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக தோட்டகலை உதவி இயக்குனர் சிபிலா மேரி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி பாரட்டினார். நிகழ்ச்சியில் தாம்பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    ×