search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரத் சி.பி.எஸ்.இ. பள்ளியில்  அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா
    X

    பாரத் சி.பி.எஸ்.இ. பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா

    • மாணவ, மாணவிகளுக்கு தங்க நாணயங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • விழாவிற்கு பள்ளியின் நிறுவனர் மணி தலைமை தாங்கி, தங்க நாணயங்களை வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பாரத் இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில் 10-ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்க நாணயங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு பள்ளியின் நிறுவனர் மணி தலைமை தாங்கி, தங்க நாணயங்களை வழங்கினார்.

    அதன்படி 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளான அஜய், ஜெயப்பிரகாஷ், ஹரிகரன், வைஷ்ணவி, ஷிரியாஸ்ரீ, ஜோசிகா ஹரிணி, அப்ரோஸ், பிரதீப், பிரியதர்ஷன் ஆகிய மாணவ, மாணவிகள் முதல் திருப்புதல் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தங்கநாணயங்கள் பரிசாக பெற்றனர்.

    தங்க நாணயங்கள் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் நிறுவனர் மணி, தாளாளர் கிருஷ்ணவேணி மணி, பள்ளியின் செயலாளர் டாக்டர் சந்தோஷ், இயக்குனர் உஷா சந்தோஷ், பள்ளியின் முதல்வர் ஹரிநாத் ஆகியோர் பாராட்டினார்கள்.

    Next Story
    ×