search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிற்சி பாசறை கூட்டம்"

    • கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுவார் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
    • தலைமை கழக நிர்வாகிகள் முக்கிய பேச்சாளர்களும் பேச இருக்கின்றனர்.

    திருவள்ளூர்:

    தி.மு.க.வில் மண்டல வாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நடந்து வந்தது.

    இதில் டெல்டா மண்டல கூட்டம் திருச்சியில் ஜூலை மாதம் நடந்தது. தென் மண்டல கூட்டம் ஆகஸ்டு மாதம் ராமநாதபுரத்திலும், மேற்கு மண்டல கூட்டம் செப்டம்பர் மாதம் காங்கேயத்திலும், வடக்கு மண்டல கூட்டம் அக்டோபரில் திருவண்ணாமலையிலும் நடைபெற்றது.

    இந்த கூட்டங்கள் மூலம் 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

    இந்த கூட்டங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரை ஆற்றி வந்தார். தேர்தல் வியூகம் குறித்து பல்வேறு விஷயங்களை எடுத்துரைத்தார்.

    இதன் நிறைவாக சென்னை மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் 12 ஆயிரம் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்கும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் இன்று திருவள்ளூரில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்றது.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளடங்கிய 11 தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். காலை 9 மணிக்கு அமைச்சர் ஆர். காந்தி, திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.சந்திரன், திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் முன்னிலையில் கூட்டம் தொடங்கியது.

    இதல் மாவட்டச் செயலாளர்கள் தா.மோ. அன்பரசன், மா.சுப்பிரமணியன், ஆவடி சா.மு. நாசர், சுந்தர், பி.கே. சேகர்பாபு, மாதவரம் எஸ். சுதர்சனம், டி.ஜே.கோவிந்த ராஜன், நே.சிற்றரசு, மயிலை வேலு, தா. இளைய அருணா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள்.

    கூட்டத்தில் சுற்றுச் சூழல் அணி மாநில துணைச் செயலாளர் வினோத் காந்தி, மாவட்ட துணை செயலாளர்கள் டாக்டர் குமரன், உதய மலர் பாண்டியன், திருவாலங்காடு மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் காஞ்சிபாடி பி.சரவணன், முன்னாள் நகர மன்ற தலைவர் பொன் பாண்டியன், அயலக அணி மாவட்ட அமைப்பாளர் ஜி ஜெய் கிருஷ்ணன், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் லோட்டஸ் எஸ்.டி. கோபிநாத், இளைஞர் அணி அமைப்பாளர் ம.கிரண். துணை அமைப்பாளர்கள் மோதிலால், ம.புவனேஷ் குமார், டி.ஆர். திலீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுவார் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு வைரஸ் காய்ச்சல், இருமல், சளி பாதிப்பு இருப்பதால் இந்த கூட்டத்தில் அவரால் பங்கேற்க இயலவில்லை.

    இதனால் அவருக்கு பதிலாக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொண்டு இன்று மாலை சிறப்புரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் முக்கிய பேச்சாளர்களும் பேச இருக்கின்றனர்.

    இன்று மாலை திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப் படத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    • திருவண்ணாமலையில் 22ந்தேதி தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டம் நடைபெறும் என்று மதியழகன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
    • வாக்குச்சாவடி பொறுப்பாளர்களையும் தவறாமல் கலந்து கொள்ள அழைப்பு

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 22.03.2023 அன்று சென்னை அண்ணா அறிவா லயத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா வை முன்னிட்டு கழகத்தில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்தல், முழுமையாக பூத் கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களின்படி கழகத்தில் மொத்தம் 2 கோடி உறுப்பினர்களை வெற்றிகரமாக சேர்த்து ஒவ்வெரு வாக்குசா வடியிலும், வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தலைமை கழகத்தால் முழுமையாக சரிபார்க்கப்பட்டுள்ளது.

    தலைவர் அறிவுரைப்படி சரிபார்க் கப்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கென வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் ஒரு நாள் பயிற்சி பாசறை கூட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டு கடந்த ஜூலை 26 மற்றும் ஆகஸ்ட் 17 மற்றும் செப்டம்பர் 24 ஆகிய தேதிகளில் மேற்கு மண்டல வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

    அதைத் தொடர்ந்து வடக்கு மண்டலம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை சட்ட மன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் வருகிற 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவண்ணாமலை ஒன்றியம் அருணாசலம் நகரில் உள்ள கலைஞர் திடலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார்.

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஒன்றிய, நகர, பேரூர், கழக செயலாளர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கான வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு நேரில் விவரங்களை தெரிவித்து அனைத்து தகவல்களையும் தெரிவித்து அதன்படி அனைத்து வாக்குச்சாவடி பொறுப்பாளர்களும் தவறாமல் 22-ந் தேதி காலை 5 மணிக்கு தங்களின் பயணத்தை புறப்பட திட்டமிட வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    காலை 8 மணிக்குள் திருவண்ணாமலை அருணாசலம் நகரில் கூட்டம் நடைபெறும் கலைஞர் திடலுக்கு சென்றடைய வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் முனைப்புடன் செயல்பட்டு அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கான அனைத்து வாக்குச்சாவடி பொறுப்பாளர்களையும் தவறாமல் அழைத்து கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெண் கல்வியை ஊக்குவித்தது தி.மு.க.தான் என்று சுப வீரபாண்டியன் பேசினார்.
    • பெண்கள் தி.மு.க.வில் இருப்பதை மிகப் பெருமையாக கருத வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டரணி பயிற்சி பாசறை கூட்டம் சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

    ஆலோசனை

    தி.மு.க. மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் தலைமை தாங்கினார். மகளிர் தொண்டரணி செயலாளர் ராணி முன்னிலை வகித்தார். தென்காசி வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் சிவசங்கரி வரவேற்று பேசினார். மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் விஜயா சவுந்தர பாண்டியன் தொகுத்து வழங்கினார்.

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், மகளிர் தொண்டரணி மாநில துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த் ஆகியோர் கலந்து கொண்டு மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

    சமத்துவம், சமூகநீதி

    கூட்டத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க.வில் உறுப்பினர்களாக இருப்பதற்கு காரணம் கட்சியின் கொள்கை மற்றும் கட்சித் தலைவர்களின் திறமையான செயல்பாடு. திராவிட கொள்கையின் உயிர்நாடியாக இருப்பது சமத்துவம், சமூகநீதி என்பதாகும். ஆண்களுக்கு நிகராக பெண்களும் சமமாக இருக்க வேண்டுமென பெண் கல்வியை ஊக்குவித்தது தி.மு.க.தான்

    அதனால் தான் இன்று பெண்கள் சமையலறையில் இருந்து வெளியே வந்து கவுன்சிலர்களாக, சேர்மன்களாக, எம்.எல்.ஏ.க்களாக, எம்.பி.க்களாக, ஆளுமை செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளனர். பெண்கள் தி.மு.க.வில் இருப்பதை மிகப் பெருமையாக கருத வேண்டும். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என சட்டம் இயற்றியவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் முத்துச்செல்வி, ஆலடி எழில்வாணன், மகளிர் அணி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சங்கீதா சுதாகர் நன்றி கூறினார்.

    ×