search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிர் விளைச்சல் போட்டி"

    • பயிர் அறுவடை மகசூலை கணக்கீடு செய்ய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது.
    • மாநில அளவில் அதிக மகசூல் பெரும் முதல் 3 விவசாயிகளுக்கு அடுத்த ஆண்டு பரிசு வழங்கப்படும்.

    ஈரோடு:

    தமிழ்நாடு வேளாண்மை-உழவர்நலத்துறை சார்பாக பாரம்பரிய மற்றும் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியினை நடத்தி வருகிறது.

    இப்போட்டியில் பங்கு பெற பெருந்துறை வட்டாரம் பெத்தாம் பாளையம் கிராமத்தை சேர்ந்த முன்னோடி விவசாயி உதயகுமார் என்பவர் இயற்கை முறையில் தங்க சம்பா என்னும் பாரம்பரிய ரக சாகுபடி செய்திருந்ததால், அவர் போட்டியில் பங்கு கொள்ள வேளாண்மை த்துறை பெருந்துறை வட்டார அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

    அதனைத்தொடர்ந்து பயிர் அறுவடை மகசூலை கணக்கீடு செய்ய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது.

    இந்த பயிர் விளைச்சல் போட்டி திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மாரியப்பன், ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி, உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் ஆசைத்தம்பி, விதை சான்றளிப்புத்துறை உதவி இயக்குநர் மோகனசுந்தரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தாமணி மற்றும் முன்னோடி விவசாயி விவேகானந்தன், பெருந்துறை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் குழந்தைவேலு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    அறுவடையின்போது சராசரி பயிர் எண்ணிக்கை, ஒரு சதுர மீட்டரில் உள்ள பயிர் குத்துக்கள், ஒரு கதிரில் உள்ள நெல் மணிகளின் எண்ணிக்கை 1000 நெல் மணிகளின் எடை ஆகிய கணக்கீடுகள் செய்யப்பட்டன.

    மாநில அளவில் அதிக மகசூல் பெரும் முதல் 3 விவசாயிகளுக்கு அடுத்த ஆண்டு பரிசு வழங்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் சசிகலா, துணை வேளாண்மை அலுவலர் அருள்மொழிவர்மன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • வயலில் பயிர் விளைச்சல் போட்டி நடைபெற்றது.
    • திட்ட அலுவலர்கள், விவசாயிகள் ஆகியோரின் முன்னிலையில் நிலக்கடலை அறுவடை நடைபெற்றது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் வேளாண்மை விரி வாக்க மைய அலுவலகம் சார்பில் மேக்கலாம்பட்டி பகுதியில் உள்ள விவசாயி தம்பிதுரை வயலில் பயிர் விளைச்சல் போட்டி நடைபெற்றது.

    வேளாண்மைத் துறை சார்பில் நெல், சிறு தானியங்கள், பயிறு வகைகள், நிலக்கடலை போன்ற பயிர்களில் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் அதிக விளைச்சல் எடுக்கும் விவசாயிகளுக்கு வயல் தேர்வு செய்யபட்டு மகசூல் எடுக்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு வேளாண்மை உழவர் நலத்துறை பரிசு வழங்கப்படுகிறது.

    மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர்மனோகரன் நடுவராக தலைமை தாங்கியும் வேளாண்மை உதவி இயக்குநர்முருகன் முன்னிலையிலும், கலெக்டரின் உதவியாளரும், வேளாண்மை அலுவலர் அருள்தாஸ் உள்ளடக்கிய குழு மத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்சிவநதி, வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர், பயிர் காப்பீடு திட்ட அலுவலர்கள், விவசாயிகள் ஆகியோரின் முன்னிலையில் நிலக்கடலை அறுவடை நடைபெற்றது.

    • மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் மணிலா மற்றும் உளுந்து பயிரிடும் விவசாயிகளுக்காக நடைபெறவுள்ளது
    • மாவட்ட அளவிலான போட்டிகளில் குத்தகைக்கு சாகுபடி செய்யும் விவசாயிகளும் கலந்து கொள்ளலாம்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பயிர் விளைச்சல் போட்டியானது நெற்பயிரில் திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிர் செய்த விவசாயிகளுக்கு மாநில அளவில் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் கூடுதல் விளைச்சல் பெறும் விவசாயி ஒருவருக்கு ரூ.5 லட்சம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்பிலான பதக்கமும் நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறன் விருது என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மைத்துறை அலுவலர்களை அணுகி நுழைவு கட்டணமாக ரூ.150 செலுத்தி தங்களது சாகுபடி நில விவரங்கள் சிட்டா அடங்கல் போன்ற ஆவணங்களை அளித்து பதிவு செய்து கொள்ளவும்.

    மேலும், மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் மணிலா மற்றும் உளுந்து பயிரிடும் விவசாயிகளுக்காக நடைபெறவுள்ளது. மணிலா பயிரில் கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.15 ஆயிரமும் வழங்கப்படும். உளுந்து பயிரில் கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

    இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மைத்துறை அலுவலர்களை அணுகி உரிய ஆவணங்களுடன் ரூ.100 நுழைவுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவும்.

    செங்கல்பட்டு மாவட்ட அளவில் மணிலா பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கான பயிர் விளைச்சல் போட்டியில் கலந்துகெண்டு விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் ரூ.50 நுழைவுக்கட்டணம் செலுத்தி பதிவு செய்திடுமாறும், இந்த போட்டியில் கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

    மேற்கண்ட மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளில் குத்தகைக்கு சாகுபடி செய்யும் விவசாயிகளும் கலந்து கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மைத்துறை அலுவலர்களை அணுகி பயன் பெறுங்கள்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×