search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயங்கரவாதிகள் மிரட்டல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.
    • வடக்கு பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    போர்ட் ஆப் ஸ்பெயின்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது.

    இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.

    ஏ பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தானும் இதே பிரிவில் இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஜூன் 9-ந் தேதி நியூயார்க்கில் மோதுகின்றன.

    இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்து இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இன்று தெரிவித்து உள்ளது.

    வடக்கு பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதை டிரினிடாட் பிரதமரும் வெளிப்படுத்தி உள்ளார். இதை தொடர்ந்து போட்டி நடைபெறும் நகரங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

    ×