search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பம்ப்செட்"

    • கோவை மாவட்டத்தில் ஏராளமான சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன.
    • கோவையில் 500-க்கும் மேற்பட்ட பம்ப்செட் தயாரிக்கும் நிறுவனங்களும், ஆயிரத்துக்கும் அதிகமான உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.

    கோவை 

    தென்னிந்தியாவின் மான்செஸ்டர் மற்றும் தொழில் நகரம் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் ஏராளமான சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன.

    குறிப்பாக கோவை பம்ப்செட் உற்பத்தியில் உலகளவில் சிறந்து விளங்குகிறது. இந்தியா முழுவதும் வீடு மற்றும் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் பம்ப்செட்டுகளில் 55 சதவீதம் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பம்ப்செட்டுகள் ஆகும்.

    கோவையில் 500-க்கும் மேற்பட்ட பம்ப்செட் தயாரிக்கும் நிறுவனங்களும், ஆயிரத்துக்கும் அதிகமான உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. ஒரு லட்சம் பேர் இந்த தொழில் மூலம் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

    0.5 எச்.பி(குதிரை திறன்) முதல் அதிகபட்சமாக 50 எச்.பி மற்றும் அதற்கு மேல் திறன் கொண்ட பம்ப்செட்டுகள் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படுகிறது.

    ரூ.1500 முதல் ரூ.4.5 லட்சம் வரை பம்ப்செட் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பம்ப்செட் விலை அதிகரித்துள்ளதால், விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    தென்னிந்திய என்ஜினீயரிங் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் (சீமா) கூறியதாவது:-

    பம்ப்செட் உற்பத்தி செலவு கடந்த ஒன்றைரை ஆண்டுகளில் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது இந்தியா முழுவதும் போர்வெல் பம்ப்செட் விற்பனை தான் அதிகம் உள்ளது.

    கடந்த ஜூலையில் பம்ப்செட்டுகளுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே விலை 40 சதவீதம் உயர்ந்த நிலையில் தற்போது 6 சதவீதம் சேர்த்து 46 சதவீதமாக விலை உயர்ந்துள்ளது.

    இந்த விலை உயர்வு காரணமாக நாடு முழுவதும் வீடு மற்றும் விவசாய பயன்பாட்டுக்கான பம்ப்செட் விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளது. சரக்கு சேவை வரி குறைப்பு, நியாயமான விலையில் உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றை அரசு உறுதி செய்தால், நெருக்கடியில் இருந்து இத்தொழில் மீண்டும் வர உதவும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மூலப்பொருட்கள் விலை உயர்வே காரணம்

    கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனையாளர்கள் கூறுகையில், பம்ப் செட் தொழில், பாதிக்க–ப்பட்டுள்ளதற்கு மூலப்பொ–ருட்கள் விலை உயர்வு முக்கிய காரணமாகும். காப்பர் விலை 500 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக அதிகரித்தது. தற்போது 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எங்களை போன்ற நிறுவனங்கள் விலை ஏற்றினால், வாடிக்கையாளர்கள் பெரிய நிறுவனங்களின் பம்ப்செட்களை வாங்கி சென்று விடுகின்றனர். மூலப்பொருட்கள் விலையை குறைக்க வேண்டும். ஜி.எஸ்.டி.யை மீண்டும் 12 சதவீதமாக மாற்ற வேண்டும் என்றார்.

    ×