search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனிப்பாறை"

    • உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான அதை ஏ23ஏ என்று அழைக்கப்படுகிறது.
    • பனிப்பாறை 30 வருடங்களை கடந்து முதல்முறையாக நகர்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    1986-ம் ஆண்டு அண்டார்டிக் கடற்கரையில் இருந்து ஒரு பெரிய பனிப் பாறை பிரிந்தது. அது விரைவாக வெட்டல் கடலில் தரைதட்டி, ஒரு பனித் தீவாக மாறியது.

    உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான அதை ஏ23ஏ என்று அழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 4,000 சதுர கி.மீ. பரப்பளவுகொண்ட இந்த பல் வடிவ பனிப்பாறை, ஒருங்கிணைந்த லண்டன் நகரத்தைவிட இரண்டு மடங்கு பெரியது. அதன் தடிமன் 1,312 அடி ஆகும். இது அண்டார்டிகாவின் பில்ச்னர் பனிப்பரப்பில் இருந்து பிரிந்த பனிப்பாறைகளின் ஒரு பகுதியாகும்.

    இந்த பனிப்பாறை கடந்த 2022-ம் ஆண்டு முதல் வேகமாக நகரத் தொடங்கியது. உலகின் மிகப்பெரிய பனிப்பாறை 30 வருடங்களை கடந்து முதல்முறையாக நகர்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் ஏ23ஏ பனிப்பாறை வடக்கு நோக்கி செல்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதன் இறுதிப் பயணமாக வடக்கு நோக்கி செல்கிறது. தற்போது யானைத் தீவு மற்றும் தெற்கு ஓர்க்னி தீவுகளுக்கு இடையே நகர்கிறது. இந்த பனிப்பாறை ஒரு டிரில்லியன் டன் தண்ணீரைக் கொண்டுள்ளது.

    இதுகுறித்து இங்கிலாந்து அண்டார்டிக் சர்வேயின் ஆண்ட்ரூ பிளெமிங் கூறும் போது, "2020-ம் ஆண்டில் செயற்கைக்கோள் படங்கள் மூலம் நகருவது தெரிந்தது. கடந்த ஆண்டின் பிற்பகுதியில், ஏ23ஏ அதன் பனிக்கட்டிகளில் இருந்து விடுபட்டு வடக்கு நோக்கிச் செல்லத் தொடங்கியது" என்றார்.

    • வீட்டின் மேலே பெரும் வெடிச்சத்தம் போன்று ஒரு சத்தம் கேட்டது
    • வானிலை எந்த மாற்றங்களும், மழையும் இன்றி சீராக இருந்தது

    அமெரிக்காவில் வசித்து வருபவர்கள் ஜெஃப் இல்க் (Jeff Ilg) மற்றும் அவர் மனைவி அமேலியா ரெயின்வில் (Amelia Rainville) தம்பதி.

    இவர்கள் இருவரும் அவர்களது வீட்டில் உறங்கி கொண்டிருந்தனர். மாடியில் உள்ள படுக்கையறையில் அவர்களின் குழந்தைகள் உறங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது பெரும் வெடிச்சத்தம் போன்று கேட்டதில் அவர்கள் திடுக்கிட்டனர். அந்த சத்தம் மாடியிலிருந்து வந்தது போலிருந்ததால், சத்தத்தை கேட்டு பரபரப்பாக மேலே ஓடிச் சென்று பார்த்தனர். ஆனால் குழந்தைகள் உறங்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் அறையில் வித்தியாசமாக ஏதும் காணப்படவும் இல்லை.

    இதனையடுத்து அவர்கள் இருவரும் வீட்டை சுற்றி ஒவ்வொரு இடமாக பார்வையிட்டனர்.

    அப்போது பின்புற படிக்கட்டுக்களில் ஒரு மிக பெரிய பனிப்பாறையின் உடைந்த துண்டு கிடப்பதை ஜெஃப் கண்டார். அந்த இடத்தை சுற்றி உடைந்த பனித்தூள்கள் இருந்தன. அவை வீட்டின் மேல்தள மொட்டை மாடியிலும் பரவி கிடந்தன.

    அப்போது வீட்டின் மேற்கூரையில் ஒரு பள்ளத்தையும் ஜெஃப் கண்டார்.

    அந்த நேரத்தில் பெருமழையோ, ஆலங்கட்டி மழையோ அங்கு பெய்து கொண்டிருக்கவில்லை. மேலும் மழைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லாமல் வானிலையும் சீராக இருந்தது.

    இரவு நேரம் எனபதால் ஏதேனும் சேதம் அடைந்திருக்கிறதா என்பது குறித்து அவர்களால் ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருந்தது. அவர் மனைவி அமெலியா உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

    கீழே விழுந்த பனிப்பாறை தூள்களிலிருந்தே அமெலியா சுமார் 4.5 கிலோ அளவிற்கு பனிப்பாறைகளை ஒரு பையில் சேகரித்தார்.

    மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகிறது.

    தரவுகளின்படி, இதுவரை அமெரிக்காவில் விழுந்த ஆலங்கட்டிகளிலேயே, 2010ல், தெற்கு டகோட்டாவில் உள்ள விவியன் பகுதியில் விழுந்த ஆலங்கட்டிதான் மிகப்பெரிதானது. அதன் எடை சுமார் 1 கிலோ.

    ஜெஃப் வீட்டில் கீழே விழுந்த பனிப்பாறையின் எடை சுமார் 6 கிலோலிருந்து 9 கிலோ வரை இருக்கும்.

    பாஸ்டன் நகரில் உள்ள விமான நிலையம் நோக்கி பறந்து கொண்டிருந்த ஒரு விமானத்திலிருந்துதான் இந்த பனிப்பாறை விழுந்திருப்பதாக ஜெஃப் தம்பதியர் நம்புகின்றனர்.

    தற்போது ஜெஃப், அமெலியா தம்பதியின் வீட்டில் விழுந்த பனிப்பாறை என்னவென்றும், அது எங்கிருந்து எவ்வாறு அவர்கள் வீட்டில் விழுந்தது என்பதும் விசாரணை முடிவில்தான் தெரிய வரும்.

    • மலை தொடரில் அமைந்துள்ள மர்மலாடா சிகரத்தில் நேற்று பலர் மலை ஏற்ற பயிற்சியில் ஈடுபட்டனர்.
    • பனிப்பாறைகள் சரிவில் இன்னும் எத்தனை பேர் சிக்கி உள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை.

    ரோம்:

    ஐரோப்பியாவில் மிகப் பெரிய மலை தொடராக ஆல்ப்ஸ் மலை தொடர் விளங்குகிறது. இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் இந்த மலை தொடர் பரந்து விரிந்து காணப்படுகிறது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை ஏற்ற பயிற்சி மற்றும் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவது வழக்கம்.

    அதேபோல இந்த மலை தொடரில் அமைந்துள்ள மர்மலாடா சிகரத்தில் நேற்று பலர் மலை ஏற்ற பயிற்சியில் ஈடுபட்டனர். சிலர் பனிச்சறுக்கு விளையாடினர்.

    அப்போது திடீரென யாரும் எதிர்பாராத வகையில் சிகரத்தின் உச்சியில் இருந்து பனிப்பாறைகள் அப்படியே சரிந்து விழுந்தது.இதில் மலை ஏறிக் கொண்டு இருந்தவர்கள் பனிப்பாறை சரிவில் சிக்கி அடித்து செல்லப்பட்டனர்.

    6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் பனிப்பாறைக்குள் மாட்டி கொண்டவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் 5 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

    பனிப்பாறைகள் சரிவில் இன்னும் எத்தனை பேர் சிக்கி உள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை.

    அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.

    ×