search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதுக்கி வைத்திருந்த"

    • கொங்கு நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
    • 10 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    பெருந்துறை:

    பெருந்துறை கொங்கு நகரில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து பெருந்துறை யில் உள்ள மளிகை கடை களுக்கு விற்பனை செய்ய ப்பட்டு வருவதாக பெரு ந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதைத் தொடர்ந்து போலீசார் கொங்கு நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 10 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அந்த வீட்டின் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் அவரது பெயர் சக்தி சிவசுப்பிரமணியன் (வயது 39) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் தடை செய்ய ப்பட்ட புகையிலை பொரு ட்களை பெருந்துறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி களில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 10 கிலோ புகையினை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து சக்தி சிவசுப்பிரமணியனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சந்தோஷ் என்பவர் வீட்டில் புலியின் பற்கள், நகங்கள், எலும்புகள் மற்றும் எரும்பு திண்ணியின் ஓடுகள் பதுக்கி வைத்தி ருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
    • மேலும் மாவட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குநர் உத்தரவின் பேரில் கடம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளில் புலி பற்கள், எழும்புகள் பதுக்கி வைத்திருப்பதாக கடம்பூர் வனச்சரக அலுவலர் இந்துமதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் வன அலுவலர்கள் சின்ன உள்ளேபாளையம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தோஷ் என்பவர் வீட்டில் புலியின் பற்கள், நகங்கள், எலும்புகள் மற்றும் எரும்பு திண்ணியின் ஓடுகள் பதுக்கி வைத்தி ருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அேத பகுதியை சேர்ந்த சந்தோஷ் (25), பத்ரிபடுகை கிராமத்தை சேர்ந்த மூர்த்தி (29), மாதேவன் (45), ராஜப்பன் (37) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் மாவட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குநர் உத்தரவின் பேரில் கடம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×