search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்"

    • கண்டன கோஷங்களை எழுப்பினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் என். கோபிநாதன் தலைமை வகித்தார். அனைவரையும் துணைத் தலைவர் ஜி. குணசேகர் வரவேற்றார். பொருளாளர் வி.மோகன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் எஸ்.பக்தவச்சலம் தொடங்கி வைத்து பேசினார்.

    கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ரேசன் கடை பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் எம். ஜெயச்சந்திர ராஜா, மர்ம நபர்களால் கடலூரில் தாக்கப்பட்டதை கண்டித்தும், உடனடியாக தாக்கப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரியும், கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் எம் முத்து குமார் போராட்ட குழு தலைவர் சபரிநாதன், உட்பட பல பேசினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இறுதியில் மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ஷியாம் நன்றி கூறினர்.

    • நகை ஏல நடவடிக்கையில் நஷ்டம் என்று பணியாளர்கள் ஓய்வு கால நிதி பயன்களை நிறுத்தக்கூடாது.
    • பொதுப்பணி நிலைத்திறனில் உள்ள குளறுபடிகளை தீர்க்க வேண்டும்.

    தருமபுரி,

    தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்ட சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய கடன், நகை கடன், மற்றும் மகளிர் சுய உதவி குழு கடன், தள்ளுபடி கூறிய தொகையினை வட்டியுடன் முழுமையாக வழங்க வேண்டும்.

    ரேஷன் கடை பணியாளர்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு குழு அமைத்து தீர்த்திட வேண்டும். மேலும் கடன் தள்ளுபடியில் விதிமீறல், நகை ஏல நடவடிக்கையில் நஷ்டம் என்று பணியாளர்கள் ஓய்வு கால நிதி பயன்களை நிறுத்தக்கூடாது.

    பொதுப்பணி நிலைத்திறனில் உள்ள குளறுபடிகளை தீர்க்க வேண்டும். ஓய்வூதியம் கருணை ஓய்வூதியம் அரசு ஆணைப்படி பணியாளர்களுக்கு உள்ள குறைகளை நிவர்த்தி செய்து தற்போது ஓய்வு பெற்றுள்ள அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் லால் பகதூர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.மாவட்ட போராட்ட குழு தலைவர் ரவி வரவேற்பு உரையாற்றினார். முன்னாள் மாநில துணைத்தலைவர் தர்மலிங்கம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

    விவசாய கடன், நகை கடன் மற்றும் மகளிர் சுய உதவி கடன் தள்ளுபடிக்குரிய தொகையினை வட்டியுடன் முழுமையாக வழங்கப்பட வேண்டும். ரேசன் கடை பணியாளர்களின் பல்வேறு பிரச்சினைகளை குழு அமைத்து தீர்த்திட வேண்டும். ஒரு துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கடன் தள்ளுபடி விதிமீறல் நகை ஏல நடவடிக்கையில் நஷ்டம் என்று பணியாளர்களின் ஓய்வு கால நிதி பயன்களை நிறுத்தக்கூடாது.

    பொதுப்பணி நிலை த்திறனில் உள்ள குள றுபடிகளை தீர்க்க வேண்டும்

    .ஓய்வூதியம் கருணை ஓய்வூதியம் அரசு ஆணைப்படி பணியாளர்களுக்குள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து தற்போது ஓய்வு பெற்றுள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்ற சங்க பொறுப்பாளர்கள் மாணிக்கம், வேலாயுதம், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கே.வி.குப்பம்:

    கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில் உள்ள குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம் எதிரில் அங்கன்வாடி பணியா ளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார தலைவர் விஜயநிர்மலா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கள் ஜூலி, உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் சத்யா வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில், 10 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள அங்கன்வாடி மையங்களை பிரதான மையங்களோடு இணைக்கக்கூடாது. கியாஸ் சிலிண்டருக்கான முழு தொகையை வழங்க வேண்டும்.

    10 ஆண்டுகள் நிறைவு செய்த பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு உண்டான மின் கட்டணத்தை அரசே வழங்க வேண்டும்.

    வீட்டு வாடகைப்படி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தது
    • ஏராளானோர் கலந்து கொண்டனர்

    ஆற்காடு:

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆற்காட்டில் தாலுகா அலுவலகம் எதிரே மக்கள் சந்திப்பு அரசு ஊழியர் விழிப்புணர்வு பிரச்சார ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு சாலை பணியாளர் சங்கத்தின் உட்கோட்ட தலைவர் பன்னீர்செல் வம் தலைமை தாங்கினார். மாவட்டதலைவர் வெங்கடேசன். மாவட்ட செயலாளர் சிவசங்கரன், மாநில செயற்குழு உறுப் பினர் சேட்டு உள்பட பலர் முன்னிலை வகித்தனர். உட் கோட்ட செயலாளர் கோவிந்தராஜூலு வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக மாநில துணைப் பொதுச் செய லாளர் பெருமாள் கலந்து கொண்டு 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும்.

    இறந்த 300-க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் குடும்பங்களில் அவர்களது வாரிசுகளுக்கு வேலை வழங்கிட வேண்டும். பொங்கல் போனஸ் ரூ.10 ஆயிரம் வழங்கிட வேண்டும். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 2021 ஏப்ரல் முதல் வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை வழங்கி அவர்களது குடும்பங்களை பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்தி பேசினார். முடிவில் உட்கோட்ட பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.

    ×