ரேசன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கண்டன கோஷங்களை எழுப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ரேசன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் என். கோபிநாதன் தலைமை வகித்தார். அனைவரையும் துணைத் தலைவர் ஜி. குணசேகர் வரவேற்றார். பொருளாளர் வி.மோகன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் எஸ்.பக்தவச்சலம் தொடங்கி வைத்து பேசினார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ரேசன் கடை பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் எம். ஜெயச்சந்திர ராஜா, மர்ம நபர்களால் கடலூரில் தாக்கப்பட்டதை கண்டித்தும், உடனடியாக தாக்கப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரியும், கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் எம் முத்து குமார் போராட்ட குழு தலைவர் சபரிநாதன், உட்பட பல பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இறுதியில் மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ஷியாம் நன்றி கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com