தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது ஏராளமானோர் கலந்து கொண்டனர்
தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் லால் பகதூர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.மாவட்ட போராட்ட குழு தலைவர் ரவி வரவேற்பு உரையாற்றினார். முன்னாள் மாநில துணைத்தலைவர் தர்மலிங்கம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

விவசாய கடன், நகை கடன் மற்றும் மகளிர் சுய உதவி கடன் தள்ளுபடிக்குரிய தொகையினை வட்டியுடன் முழுமையாக வழங்கப்பட வேண்டும். ரேசன் கடை பணியாளர்களின் பல்வேறு பிரச்சினைகளை குழு அமைத்து தீர்த்திட வேண்டும். ஒரு துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கடன் தள்ளுபடி விதிமீறல் நகை ஏல நடவடிக்கையில் நஷ்டம் என்று பணியாளர்களின் ஓய்வு கால நிதி பயன்களை நிறுத்தக்கூடாது.

பொதுப்பணி நிலை த்திறனில் உள்ள குள றுபடிகளை தீர்க்க வேண்டும்

.ஓய்வூதியம் கருணை ஓய்வூதியம் அரசு ஆணைப்படி பணியாளர்களுக்குள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து தற்போது ஓய்வு பெற்றுள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்ற சங்க பொறுப்பாளர்கள் மாணிக்கம், வேலாயுதம், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com