search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் ஒப்படைப்பு"

    • பையில் பணத்துடன் கூடிய மணி பர்ஸ், செல்போன் மற்றும் சில ஆவணங்கள் இருந்தது.
    • பள்ளி மாணவனின் நேர்மையை அவரது ஆசிரியர்களும், மாணவர்களும் பாராட்டினர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள மிளகாய்பட்டியைச் சேர்ந்த ராமர் மகன் பொன்ஜனகன் (வயது 17).இவர் நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இந்நிலையில் மாணவன் பொன்ஜனகன் மாலையில் டியூசன் முடித்து விட்டு நிலக்கோட்டை நால்ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் ஒரு பணப்பை கிடந்தது. அந்த பையில் பணத்துடன் கூடிய மணி பர்ஸ், செல்போன் மற்றும் சில ஆவணங்கள் இருந்தது. இதை பார்த்த மாணவன் அதனை நிலக்கோட்டை நால் ரோட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தார்.

    உடனடியாக பள்ளி மாணவனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் பிரசாந்திடம் இது குறித்து போலீசார் தெரிவித்தனர். மாணவனின் இந்த செயலை பாராட்டிய நிலகோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் பிரசாத் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

    பள்ளி மாணவனின் நேர்மையை அவரது ஆசிரியர்களும், மாணவர்களும் பாராட்டினர். மேலும் தவற விட்ட பணப்பை மற்றும் செல்போன் யாருடையது என்று விசாரணை நடத்தியதில் துரைசாமி என்பவருக்கு சொந்தமானது என தெரியவரவே அவரிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவரும் பள்ளி மாணவனின் செயலுக்கு பாராட்டு தெரிவித்தார்.

    ×