search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணமோசடி"

    • ஆடை உற்பத்தியாளர்களின் வாட்ஸ் அப்புக்கு அவர்களது செல்போன் எண்ணில் இருந்து ஹாய் மெசேஜ் அனுப்புகின்றனர்.
    • தயாரிப்பு சார்ந்த தொழில்நுட்ப விவரங்களையும் அனுப்பி தங்கள் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கச் செய்கின்றனர்.

    திருப்பூர் :

    மோசடி ஆசாமிகள் புதுப்புது வழிகளில் மக்களை ஏமாற்றும் வித்தைகளை தெரிந்து செயல்படுத்தி வருகின்றனர். இதில் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களை குறிவைத்து புதுவகை மோசடியை அரங்கேற்றி வருகின்றனர்.

    அதன்படி மோசடியில் ஈடுபடும் மர்மநபர்கள் முதலில் ஆடை உற்பத்தியாளர்களின் வாட்ஸ் அப்புக்கு அவர்களது செல்போன் எண்ணில் இருந்து ஹாய் மெசேஜ் அனுப்புகின்றனர். எய்ம்ஸ் மருத்துவமனையின் ஜோத்பூர் கிளைக்கு டீ- சர்ட் தேவைப்படுகிறது.உங்கள் நிறுவனத்தால் தயாரித்து தரமுடியுமா? என ஆடை தயாரிப்பு ஆர்டர் வழங்குவதற்காக வர்த்தகர்கள் விசாரணை செய்வது போல மர்மநபர்கள் கேட்கின்றனர். டீ- சர்ட்படம், தேவைப்படும் அளவு, நிறம், ஜி.எஸ்.எம்., என தயாரிப்பு சார்ந்த தொழில்நுட்ப விவரங்களையும் அனுப்பி தங்கள் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கச் செய்கின்றனர்.புது ஆர்டரை கைப்பற்றும் ஆர்வத்தில் ஆடை உற்பத்தியாளர்கள் சம்மதம் தெரிவித்து பதில் அனுப்புகின்றனர்.

    இதையடுத்து ஆடை தயாரிப்பு ஆர்டரை உறுதி செய்வதற்காக நீங்கள் நேரடியாக ஜோத்பூருக்கு வரவேண்டும். சலுகை கட்டணத்தில் நாங்களே விமான டிக்கெட் புக்கிங் செய்துதருகிறோம் என்கின்றனர்.ஆடை தயாரிப்பு ஆர்டர்களை பெறுவதற்காக பின்னலாடை உற்பத்தியாளர்கள் வெளிமாநிலங்களுக்கு சென்று வர்த்தகர்களை நேரடியாக சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். தேடிவரும் வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்கிற அடிப்படையில் கேட்கும் விவரங்களை அனுப்பிவைக்கின்றனர் உற்பத்தியாளர்கள்.

    அடுத்த சில நிமிடங்களில் கோவையில் இருந்து ஜோத்பூருக்கு ஆடை உற்பத்தியாளரின் பெயருக்கு விமான டிக்கெட் புக்கிங் செய்யப்பட்டதாக ஸ்கிரீன் ஷாட்டை அனுப்பிவிடுகின்றனர். பெயர் விவரம், பார்கோடு, விமான விவரம், புறப்படும் இடம், சேருமிடம் என பார்ப்பதற்கு அச்சு அசலாக போலி விமான டிக்கெட் உள்ளது.

    விமான டிக்கெட்டுக்கான கட்டண தொகை ரூ.7ஆயிரத்தை மட்டும் உடனடியாக வங்கி கணக்கில் செலுத்திவிடுங்கள் என்று கூறி உற்பத்தியாளர்களை வேகப்படுத்துகின்றனர்.பல ஆயிரம் ரூபாய் மதிப்பு ஆடைகள் தயாரிக்க ஆர்டர் கிடைக்கப்போகும் மகிழ்ச்சியில் சில ஆடை உற்பத்தியாளர்கள் தொகையை அனுப்பிவிடுகின்றனர். கணக்கில் தொகை வந்துசேர்ந்த மறுகணமே மோசடி ஆசாமிகள் ஆடை உற்பத்தியாளருடனான தொடர்பை துண்டித்துவிடுகின்றனர்.

    ஆடை உற்பத்தியாளருக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தெரிந்தாலோ தங்களை பற்றிய விவரங்களை துருவினாலோ தொகை அனுப்ப தாமதித்தாலோ உங்களுக்கு ஆர்டர் பெற விருப்பமில்லை . ஆர்டரை கேன்சல் செய்யவா? என்று கூறிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விடுகின்றனர். அதுவரை அனுப்பிய உரையாடல்கள், விமான டிக்கெட் உள்ளிட்ட அனைத்தையும் உடனேயே அழித்துவிடுகின்றனர்.

    இது குறித்து பின்னலாடை உற்பத்தியாளர் முத்துகிருஷ்ணன் கூறியதாவது:- பின்னலாடை உற்பத்தியாளர்களிடமிருந்து நூதன முறையில் பணம் பறிக்க ஒரு கும்பல் வலை விரித்து வருகிறது. ஆர்டரை எதிர்பார்த்து காத்திருக்கும் குறு, சிறு பின்னலாடை உற்பத்தியாளர்கள் தான் இந்த ஆசாமிகளின் இலக்கு.இணையதளங்களில் இருந்து செல்போன் எண், முகவரி விவரங்களை எளிதாக பெற்றுக்கொள்கின்றனர். வாட்ஸ் அப்பில் வர்த்தகர் போலவே உரையாடி பணம் பறிக்க முயற்சிக்கின்றனர். பெரிய தொகை கேட்டால் சந்தேகம் ஏற்பட்டுவிடும்.

    தொகையை இழந்தவர் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது. அதனாலேயே போலி விமான டிக்கெட் அனுப்பி கட்டண தொகையாக ரூ.7ஆயிரம் முதல் ரூ.10ஆயிரம் வரை மட்டும் அனுப்பகோருகின்றனர். தினமும் 10 உற்பத்தியாளரை வீழ்த்தினாலும் இருந்த இடத்திலேயே 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை சுருட்டிவிட முடியும்.கடந்த சில நாட்களில் 100க்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தியாளர்களை வலையில் வீழ்த்த முயன்றுள்ளனர். நான் உட்பட பல ஆடை உற்பத்தியாளர்கள் சுதாரித்துக்கொண்டு தப்பியுள்ளோம். சிலர் வலையில் சிக்கி தொகையை இழந்துள்ளனர்.ஆர்டர் வழங்குவதாக ஆசைகாட்டி மோசடி செய்வோரின் வலையில் பின்னலாடை உற்பத்தியாளர்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது.உஷாராக செயல்படவேண்டும். விமான கட்டணம் உட்பட எதற்காகவும் எந்த ஒரு தொகையையும் அனுப்பக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

    டெல்லி நீதிமன்றம் சட்டவிரோத நிதி பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி பத்திரிகையாளர் உபேந்திரா ராய்க்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. #UpendraRai #Delhicourt #CBIcustody
    புதுடெல்லி:

    டெல்லியின் பிரபல பத்திரிகையாளர் உபேந்திரா ராய் என்பவரை சுமார் 79 கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோத நிதி பரிவர்த்தனை நடத்தியது, போலியான ஆவணங்களை சமர்ப்பித்து விமான நிலைய அனுமதி அடையாள அட்டை பெற்றது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த மாதம் 3-ம் தேதி கைது செய்தனர்.

    இவ்விவகாரத்தில் லக்னோ, நொய்டா, டெல்லி, மும்பை உள்பட 8 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஏர் ஒன் ஏவியேஷன் நிறுவன உரிமையாளர் பிரசுன் ராய் என்பவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    உபேந்திர ராயிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 5 நாள் காவலில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடைந்த நிலையில் அவரை நீதிமன்ற காவலில் அடைத்தனர். இதற்கிடையில், நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உபேந்திரா ராய் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் பணமோசடி வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில், உபேந்திர ராய் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். தன்னை காவலில் வைத்திருப்பதற்கு இனி அவசியம் இல்லை என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    அதனை விசாரித்த சிறப்பு சி.பி.ஐ நீதிபதி சந்தோஷ் உபேந்திர ராய்க்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மேலும், ஜாமின் தொகையாக 5 லட்சம் வழங்க வேண்டும் மற்றும் இரண்டு பேர் ஜாமின் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜாமின் அவருக்கு வழங்கினார். #UpendraRai #Delhicourt #CBIcustody

    டெல்லி பத்திரிகையாளர் உபேந்திரா ராய் மீது பணமோசடி வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். #UpendraRai
    புதுடெல்லி:

    டெல்லியின் பிரபல பத்திரிகையாளர் உபேந்திரா ராய் என்பவரை சுமார் 79 கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோத நிதி பரிவர்த்தனை நடத்தியது, போலியான ஆவணங்களை சமர்ப்பித்து விமான நிலைய அனுமதி அடையாள அட்டை பெற்றது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த மாதம் 3-ம் தேதி கைது செய்தனர்.

    இவ்விவகாரத்தில், லக்னோ, நொய்டா, டெல்லி, மும்பை உள்பட 8 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஏர் ஒன் ஏவியேஷன் நிறுவன உரிமையாளர் பிரசுன் ராய் என்பவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.  

    இந்நிலையில், நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உபேந்திரா ராய் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் பணமோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், டெல்லி மற்றும் நொய்டா உட்பட பல இடங்களில் உள்ள உபேந்திரா ராய்க்கு சொந்தமான பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். #UpendraRai
    ×