search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணபரிவர்த்தனை"

    • இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட உள்ளது.
    • நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி

    மத்திய ரிசர்வ் வங்கி சார்பில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் பாதுகாப்பான பயன்பாடு குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கியது. இதனை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த அலுவலர்களை அறிவுறுத்தினார். இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட உள்ளது. இதில் பணப்பரிவர்த்தனையின்போது செய்யப்படும் மோசடி, ஆன்லைன் செயலிகளை கவனமாக கையாளுதல், ரகசிய எண்களை ரகசியமாக வைத்து கொள்ளுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மைக்ரோ ஏ.டி.எம். மூலம் பெருவிரல் ரேகை கொண்டு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டதை பார்வையிட்டார்.
    • விவசாய கடனாக கறவை மாடு வாங்க 4 பேருக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் 17 மகளிர் குழுக்களுக்கு ரூ.46 லட்சம் கடன் உதவியை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

    தஞ்சை சிந்தாமணி நியாயவிலைக்கடையில் வினியோகம் செய்யப்படும் பொருட்களின் தரம் குறித்தும், விற்பனை முனைய கருவியின் செயல்பாடு குறித்தும் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளருமான ராதாகிரு ஷ்ணன் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர், மத்திய கூட்டுறவு வங்கியின் மருத்துவக் கல்லூரிகிளை மற்றும் மகளிர் கிளையில் உள்ள வங்கியியல் வசதி கொண்ட வாகனத்தில் வாடிக்கையாளர்களுக்கு மைக்ரோ ஏ.டி.எம். மூலம் பெருவிரல் ரேகை கொண்டு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டதை பார்வையி ட்டார்.

    மேலும் வங்கி கிளையில் 17 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.46 லட்சத்து 40 ஆயிரத்தையும், மத்திய கால விவசாய கடனாக கறவை மாடு வாங்க 4 பேருக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தையும் வழங்கினார்.

    இேத போல் நிக்கல்சன் கூட்டுறவு நகர வங்கி சார்பில் 3 பேருக்கும் மாற்றுத் திறனாளிகள் 3 பேருக்கும் கடனுதவி வழங்கப்பட்டது.

    அதன் பிறகு தஞ்சை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு சென்ற முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அங்கு செயல்படும் சுயசேவை பிரிவு பல்பொருள் அங்காடி, எழுது பொருள் அங்காடி பண்ணை பசுமை காய்கறி விற்பனை கூட்டுறவு மருந்தகம் ஆகியவற்றை பார்வயைிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, கூட்டு றவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, நுகர் பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஷ்வரி தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் பழனீஸ்வரி உள்பட கூட்டுறவு த்துறை அதிகாரிகள், வருவா ய்த்துறை அதிகாரிகள், நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×