என் மலர்
நீங்கள் தேடியது "Money Transfer Awareness"
- இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட உள்ளது.
- நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி
மத்திய ரிசர்வ் வங்கி சார்பில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் பாதுகாப்பான பயன்பாடு குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கியது. இதனை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த அலுவலர்களை அறிவுறுத்தினார். இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட உள்ளது. இதில் பணப்பரிவர்த்தனையின்போது செய்யப்படும் மோசடி, ஆன்லைன் செயலிகளை கவனமாக கையாளுதல், ரகசிய எண்களை ரகசியமாக வைத்து கொள்ளுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.






