search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்ஸ்"

    • இயர் பட்ஸ் பயன்படுத்தி அழுக்குகளை எடுக்கிறோம்.
    • அழுக்குகள் உள்பகுதியில் செல்கிறது.

    நகத்தை எப்படி வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்து நகத்தை வெட்டுகிறோம். அதேபோல தான் காதுகளையும் அடிக்கடி சுத்தம் செய்வோம். அதனை சுத்தம் செய்வதற்கு சில நபர்கள் ஊக்கு, சில நபர்கள் கோழி இறகு, இன்னும் சில நபர்கள் இயர் பட்ஸ் பயன்படுத்துவார்கள். இயர் பட்ஸ் பயன்படுத்துவதினால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

    காது அடைப்பு

    காதுகளில் இருக்கும் அழுக்குகளை நீக்குவதற்கு இயர் பட்ஸ் பயன்படுத்தி அழுக்குகளை எடுக்கிறோம். ஆனால் இயர் பட்ஸ் பயன்படுத்தும் போது நடுப்பகுதியில் இருக்கும் அழுக்குகள் உள்பகுதியில் செல்கிறது. இதனால் அழுக்குகள் சேர்ந்து காது அடைப்பை ஏற்படுத்தும்.

    காதில் இருக்கும் மெழுகுகள் காதுகளின் ஆரோக்கியத்தை பாதுக்காக்கிறது. அதேநேரம் அந்த மெழுகினை அடிக்கடி எடுத்தால் காதில் எரிச்சலையும், வறட்சியையும் ஏற்படுத்தும்.

    காயம்:

    காதுகளில் அடிக்கடி இயர் பட்ஸ் பயன்படுத்தினால் காதில் காயம் அல்லது சீழ் வடிதல் பிரச்சினையை உண்டாக்கும். மேலும் காதின் செவி தன்மையை பாதித்து காது கேட்காமல் பிரச்சனையை ஏற்படுத்தும்.

    நாம் சாப்பிடும் உணவுகளின் சுவையை அறிவதற்கு காதுகளின் நடுப்பகுதியில் ஒரு நரம்பு செல்கிறது. இதில் நீங்கள் இயர் பட்ஸ் பயன்படுத்தும் போது இந்த நரம்பினை பாதித்தால் உணவின் சுவையை அறிய முடியாது.

    அதனால் அடிக்கடி இனி இயர் பட்ஸ் பயன்படுத்தாதீர்கள். மேலும் ஊக்கு, குச்சி, கேர்பின் போன்றவை பயன்படுத்தி காதுகளில் உள்ள அழுக்குகளை எடுக்க பயன்படுத்தாதீர்கள் அது உங்களுக்கே பிரச்சினையாக மாற வாய்ப்பு உள்ளது.

    ×