search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு கடை நடத்த தடை"

    • பட்டாசு கடை அமைக்கும்போது 50 மீட்டர் சுற்றளவுக்கு காலியிடம் இருக்க வேண்டும்.
    • கட்டிடத்தின் மேல் மாடியில் குடியிருப்பு மற்றும் பட்டாசு இருப்பு இருத்தல் கூடாது.

    கோவை,

    தீபாவளி பண்டிகை அக்டோபர் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. கோவை மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் நடத்திட விருப்பம் உள்ளவர்கள் இணைய வழியாக மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். தற்காலிக பட்டாசு உரிம த்தினை பெறுவத ற்கென தங்களது விண்ணப்ப த்தினை வரும் 30-ந் தேதிக்குள் இ-சேவை மையங்கள் மூலம் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    பட்டாசு கடைகள் உள்ள கட்டிடத்தின் மேல் மாடியில் குடியிருப்பு மற்றும் பட்டாசு இருப்பு இருத்தல் கூடாது.

    பட்டாசு கடையின் அருகில் மருத்து வமனைகள், பள்ளிகள், வழிபாட்டு தலங்கள், திருமண மண்டபங்கள் எளிதில் தீப்பற்றும் பொருட்கள் உள்ள பகுதிகள், கட்டிடங்கள், டீக்கடை இருத்தல் கூடாது.பொதுமக்கள் கூடும் பகுதிகள், பஸ் நிறுத்தம், பஸ் நிலையங்கள் அருகில் பட்டாசு கடை அமைத்தல் கூடாது. பட்டாசு கடையின் கட்டிடத்தில் கண்டிப்பாக 2 வழிகள் இருக்க வேண்டும். அதில் அவசர காலவழி கடையின் வெளியே செல்லும்படி இருத்தல் வேண்டும். காலி இடத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்கும்போது 50 மீட்டர் சுற்றளவுக்கு காலியிடம் இருக்க வேண்டும்.திருமண மண்டபங்கள், அரங்கங்கள், சமுதாய கூடங்கள், கட்டிடங்களில் பட்டாசு கடை அமைக்க கூடாது. பட்டாசு உரிம கட்டணனம் ரூ.700-யை www.karuvoolam.tn.gov.\challan\echallan என்ற இணையதளத்தில் செலுத்தியதற்கான அசல் செலுத்து சீட்டுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் மேற்குறிப்பிட்ட காலக்கெ டுவிற்கு பின்னர் வ ரப்பெறும் விண்ண ப்ப ங்களும், நிபந்தனை கள் கடைபி டிக்காத விண்ணப்ப ங்களும் நி ர்வாக காரணங்களால் ஏற்று கொள்ளப்படமாட்டாது.

    இந்த தகவலை கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

    ×