search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஜார் போலீசார்"

    • பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • பஜார் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தக்கலப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் நாகேந்திரகனி. இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 35). வீட்டின் அருகே பெட்டிக்கடை வைத்து உள்ளார்.

    குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத் தன்று கிருஷ்ணவேணியை கடையை பார்த்து கொள்ளு மாறு நாகேந்திரகனி கூறி னார். அப்போது அவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் மனம் உடைந்த கிருஷ்ணவேணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருஷ்ணவேணி யின் தாயார் மாரியம்மாள் மாரனேரி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    வெம்பக்கோட்டை வெற்றிலையூரணி அரசரடி காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து (33). இவரது மனைவி சித்திரைச்செல்வி. மாரிமுத்து குடித்து விட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். வீட்டுக்கு செலவுக்கும் பணம் கொடுப்பதில்லை. இதனால் அவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சம்பவத் தன்று மனைவி வெளியே சென்றிருந்தபோது மாரி முத்து வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சித்திரைச்செல்வி வெம்பக் கோட்டை போலீசில் புகார் செய்தார்.

    விருதுநகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வர் விமல்குமார் (35). இவரது மனைவி சொர்ண லதா (30). இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்ட வர்கள். 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று குடும்ப பிரச் சினை காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த விமல்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் விருதுநகர் பஜார் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ×