search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Woman committed"

    • பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • பஜார் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தக்கலப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் நாகேந்திரகனி. இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 35). வீட்டின் அருகே பெட்டிக்கடை வைத்து உள்ளார்.

    குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத் தன்று கிருஷ்ணவேணியை கடையை பார்த்து கொள்ளு மாறு நாகேந்திரகனி கூறி னார். அப்போது அவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் மனம் உடைந்த கிருஷ்ணவேணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருஷ்ணவேணி யின் தாயார் மாரியம்மாள் மாரனேரி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    வெம்பக்கோட்டை வெற்றிலையூரணி அரசரடி காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து (33). இவரது மனைவி சித்திரைச்செல்வி. மாரிமுத்து குடித்து விட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். வீட்டுக்கு செலவுக்கும் பணம் கொடுப்பதில்லை. இதனால் அவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சம்பவத் தன்று மனைவி வெளியே சென்றிருந்தபோது மாரி முத்து வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சித்திரைச்செல்வி வெம்பக் கோட்டை போலீசில் புகார் செய்தார்.

    விருதுநகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வர் விமல்குமார் (35). இவரது மனைவி சொர்ண லதா (30). இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்ட வர்கள். 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று குடும்ப பிரச் சினை காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த விமல்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் விருதுநகர் பஜார் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • இவர்க ளுக்கு குழந்தை இல்லாததால் டெஸ்ட் டியூப் மூலம் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.
    • நான் ஏதாவது செய்து கொள்வேன் என்று செல்வராஜ் கூறி வந்தாராம்.

    அம்மாபேட்டை

    சேலம் மாவட்டம் காடை யாம்பட்டி அடுத்த பெரிய வடகம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (35).

    இவர் சேலம் ரெயில்வே துறையில் ஆப் ரேட்டிங் பிரிவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (32).

    இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் டெஸ்ட் டியூப் மூலம் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.

    குழந்தை பிறந்தது முதலே கிருஷ்ணவேணி உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் 2 குழந்தை களையும் வைத்து பராமரிக்க முடியவில்லை.

    நான் ஏதாவது செய்து கொள்வேன் என்று செல்வராஜ் கூறி வந்தாராம்.

    இதையடுத்து அவர் தனது மனைவியை குருவரெட்டியூர் பகுதியில் உள்ள கிருஷ்ணவேணியின் உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

    இந்த நிலையில் கிருஷ்ண வேணியின் சகோதரர் செல்வராஜிக்கு போன் செய்து கிருஷ்ணவேணி மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடந்து கொள்கிறார். எனவே அவரை அழைத்து செல்லுங்கள் என்று கூறினார்.

    இதையடுத்து விடு முறை கிடைத்தவுடன் வந்து அழைத்து செல்வதாக செல்வராஜ் கூறினார்.

    இந்த நிலையில் கிருஷ்ண வேணி வீட்டில் சேலையில் தூக்கு மாட்டி கொண்டார்.இதை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கன வே இறந்து விட்டதாக கூறினார்.

    இது குறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×