search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hanging herself"

    • இவர்க ளுக்கு குழந்தை இல்லாததால் டெஸ்ட் டியூப் மூலம் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.
    • நான் ஏதாவது செய்து கொள்வேன் என்று செல்வராஜ் கூறி வந்தாராம்.

    அம்மாபேட்டை

    சேலம் மாவட்டம் காடை யாம்பட்டி அடுத்த பெரிய வடகம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (35).

    இவர் சேலம் ரெயில்வே துறையில் ஆப் ரேட்டிங் பிரிவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (32).

    இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் டெஸ்ட் டியூப் மூலம் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.

    குழந்தை பிறந்தது முதலே கிருஷ்ணவேணி உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் 2 குழந்தை களையும் வைத்து பராமரிக்க முடியவில்லை.

    நான் ஏதாவது செய்து கொள்வேன் என்று செல்வராஜ் கூறி வந்தாராம்.

    இதையடுத்து அவர் தனது மனைவியை குருவரெட்டியூர் பகுதியில் உள்ள கிருஷ்ணவேணியின் உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

    இந்த நிலையில் கிருஷ்ண வேணியின் சகோதரர் செல்வராஜிக்கு போன் செய்து கிருஷ்ணவேணி மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடந்து கொள்கிறார். எனவே அவரை அழைத்து செல்லுங்கள் என்று கூறினார்.

    இதையடுத்து விடு முறை கிடைத்தவுடன் வந்து அழைத்து செல்வதாக செல்வராஜ் கூறினார்.

    இந்த நிலையில் கிருஷ்ண வேணி வீட்டில் சேலையில் தூக்கு மாட்டி கொண்டார்.இதை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கன வே இறந்து விட்டதாக கூறினார்.

    இது குறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குளியல் அறைக்கு சென்ற சிறுமி மெஹருண்கதுன் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அவரது தம்பி பிரோஜ் அன்சாரி குளியல் அறை கதவை தட்டியுள்ளார்.
    • கதவு திறக்கப்படாததால் கதவின் மேலே ஏறி பார்த்தபோது மெஹருண்கதுன் தனது சால்வையால் தூக்குமாட்டி தொங்கிக் கொண்டிருந்தார்.

    பெருந்துறை:

    ஜார்கண்ட் மாநிலம் சுந்தர்படை மாவட்டம் சாந்தனா பகுதியை சேர்ந்தவர் ராம்ஜன் மியான். இவர் தனது மனைவி தமீனா பிவி, மகள் மெஹருண்கதுன் (வயது 13), மகன் பிரோஜ்அன்சாரி ஆகியோருடன் கடந்த 5 வருடமாக பெருந்துறை கோவை மெயின் ரோடு, கடப்பம்படை பகுதியில் குடியிருந்து வருகிறார்.

    கணவன், மனைவி இருவரும் பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் மாவு கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்றனர். மகளும், மகனும் வீட்டில் தனியே இருந்துள்ளனர்.

    இந்நிலையில் மாலை குளியல் அறைக்கு சென்ற சிறுமி மெஹருண்கதுன் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அவரது தம்பி பிரோஜ் அன்சாரி குளியல் அறை கதவை தட்டியுள்ளார். கதவு திறக்கப்படாததால் கதவின் மேலே ஏறி பார்த்தபோது மெஹருண்கதுன் தனது சால்வையால் தூக்குமாட்டி தொங்கிக் கொண்டிருந்தார்.

    உடனடியாக பிரோஜ் அன்சாரி பெற்றோருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து கணவன்-மனைவி வீட்டிற்கு வந்து தூக்குமாட்டி தொங்கி கொண்டிருந்த தனது மகளை கீழே இறக்கி பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.

    கடந்த 4 நாட்களாக மெஹருண்கதுன் வயிற்று வலி ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வயிற்று வலியின் காரண–மாக தூக்கு மாட்டி இறந்து விட்டதாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • ஆப்பக்கூடல் அருகே உள்ள சுக்கநாயக்கனூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் சிறுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • புகாரின் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    மேற்கு வங்கம் மாநிலம் மேற்கு பர்கானா மாவட்டம் சந்தேஷ்கல்லி பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் அமின் மோலா (34).

    இவர் கடந்த ஒன்றரை வருடமாக ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள சுக்கநாயக்கனூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தனது குடும்பத்தினருடன் தங்கி வேலை செய்து வருகிறார்.

    இவரது இளைய மகள் பாத்திமா (13) மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அனைவரும் வீட்டுக்கு வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டுக்குள் இருந்து சத்தம் கேட்டுள்ளது.

    உள்ளே சென்று பார்த்தபோது பாத்திமா வீட்டின் விட்டத்தில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாத்திமாவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து ராகுல் மோலா அளித்த புகாரின் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×