search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suicide by"

    • மகளிர் குழுவுக்கு செலுத்த வைத்திருந்த பணத்தை எடுத்து வேலுசாமி மது குடித்துள்ளார்.
    • விஷ மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் பி.மேட்டுப்பாளையம் விவேகானந்தர் வீதியை சேர்ந்தவர் வேலுசாமி(37). கட்டிட தொழிலாளி. இவருக்கு ஜீவா என்ற மனைவியும், மகன், மகள் உள்ளனா். வேலுசாமிக்கு மதுப்பழக்கம் உள்ளது.

    இதனால், வேலுசாமி குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல் மது குடித்து வந்துள்ளார். வேலுசாமி கடந்த மாதம் 29ம் தேதி அவரது மனைவி ஜீவா வீட்டில் மகளிர் குழுவுக்கு செலுத்த வைத்திருந்த பணத்தை எடுத்து வேலுசாமி மது குடித்துள்ளார்.

    இதையடுத்து கணவன்-மனைவிக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில், மனவேதனை அடைந்த வேலுசாமி வீட்டில் இருந்த விஷ மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அவரது மனைவி ஜோதி, அக்கம்பக்கத்தினர் உதவி யுடன் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர், மேல்சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடித்த அதே பாட்டிலை உடைத்து அதில் தனக்கு தானே கழுத்தை அறுத்து க்கொண்டார்.
    • பொதுமக்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்

    ஈரோடு, 

    ஈரோடு கருங்கல்பாளையம் ஆலமரத்தெருவை சேர்ந்தவர் காதர். இவரது மகன் ஷாஜகான்(33). இவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் மரப்பாலம் நேதாஜி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்றுமுன்தினம் இரவு மது அருந்தி உள்ளார்.

    போதை தலைக்கு ஏறியதும், தான் குடித்த அதே பாட்டிலை உடைத்து அதில் தனக்கு தானே கழுத்தை அறுத்து க்கொண்டார்.

    இதை கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போதையில் இருந்த ஷாஜகான் சிறிது நேரத்தில் மருத்துவ மனையில் இருந்து தப்பி ரத்தம் சொட்ட சொட்ட மீண்டும் அதே டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார்.

    இதனையடுத்து மீண்டும் மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவ மனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக ஈரோடு டவுன் போலீசார் விசா ரணை நடத்தியதில் ஷாஜகான் இதற்கு முன்பு 5 முறை இதே போன்று கழுத்தை அறுத்துக்கொண்டதும், குடிபோதையில் இது போல செய்து கொள்வதும் தெரியவந்தது.

    இதனிடையே ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷாஜகானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. 

    • இவர்க ளுக்கு குழந்தை இல்லாததால் டெஸ்ட் டியூப் மூலம் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.
    • நான் ஏதாவது செய்து கொள்வேன் என்று செல்வராஜ் கூறி வந்தாராம்.

    அம்மாபேட்டை

    சேலம் மாவட்டம் காடை யாம்பட்டி அடுத்த பெரிய வடகம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (35).

    இவர் சேலம் ரெயில்வே துறையில் ஆப் ரேட்டிங் பிரிவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (32).

    இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் டெஸ்ட் டியூப் மூலம் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.

    குழந்தை பிறந்தது முதலே கிருஷ்ணவேணி உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் 2 குழந்தை களையும் வைத்து பராமரிக்க முடியவில்லை.

    நான் ஏதாவது செய்து கொள்வேன் என்று செல்வராஜ் கூறி வந்தாராம்.

    இதையடுத்து அவர் தனது மனைவியை குருவரெட்டியூர் பகுதியில் உள்ள கிருஷ்ணவேணியின் உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

    இந்த நிலையில் கிருஷ்ண வேணியின் சகோதரர் செல்வராஜிக்கு போன் செய்து கிருஷ்ணவேணி மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடந்து கொள்கிறார். எனவே அவரை அழைத்து செல்லுங்கள் என்று கூறினார்.

    இதையடுத்து விடு முறை கிடைத்தவுடன் வந்து அழைத்து செல்வதாக செல்வராஜ் கூறினார்.

    இந்த நிலையில் கிருஷ்ண வேணி வீட்டில் சேலையில் தூக்கு மாட்டி கொண்டார்.இதை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கன வே இறந்து விட்டதாக கூறினார்.

    இது குறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவி சுகன்யா (28). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
    • சுகன்யா சம்பவத்தன்று பயிர்களுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டார்.

    பவானி

    ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள கல்பாவி, பெரியகுரும்ப பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லவேல்.

    இவரது மனைவி சுகன்யா (28). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். செல்லவேல் கூலி வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் சுகன்யாவுக்கு கடந்த 3 ஆண்டுகளாக வயிற்று வலி மற்றும் நோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது.

    இதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாக வில்லையாம். இதனால் சுகன்யா மன முடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் சுகன்யா சம்பவத்தன்று பயிர்களுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டார்.

    இதையறிந்த சுகன்யாவின் அக்கா சத்யா அளித்த தகவலின் பேரில் உடனடியாக அவரை அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுகன்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×