search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Construction worker commits"

    • மகளிர் குழுவுக்கு செலுத்த வைத்திருந்த பணத்தை எடுத்து வேலுசாமி மது குடித்துள்ளார்.
    • விஷ மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் பி.மேட்டுப்பாளையம் விவேகானந்தர் வீதியை சேர்ந்தவர் வேலுசாமி(37). கட்டிட தொழிலாளி. இவருக்கு ஜீவா என்ற மனைவியும், மகன், மகள் உள்ளனா். வேலுசாமிக்கு மதுப்பழக்கம் உள்ளது.

    இதனால், வேலுசாமி குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல் மது குடித்து வந்துள்ளார். வேலுசாமி கடந்த மாதம் 29ம் தேதி அவரது மனைவி ஜீவா வீட்டில் மகளிர் குழுவுக்கு செலுத்த வைத்திருந்த பணத்தை எடுத்து வேலுசாமி மது குடித்துள்ளார்.

    இதையடுத்து கணவன்-மனைவிக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில், மனவேதனை அடைந்த வேலுசாமி வீட்டில் இருந்த விஷ மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அவரது மனைவி ஜோதி, அக்கம்பக்கத்தினர் உதவி யுடன் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர், மேல்சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×