என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வடமாநில சிறுமி தூக்குபோட்டு தற்கொலை
- குளியல் அறைக்கு சென்ற சிறுமி மெஹருண்கதுன் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அவரது தம்பி பிரோஜ் அன்சாரி குளியல் அறை கதவை தட்டியுள்ளார்.
- கதவு திறக்கப்படாததால் கதவின் மேலே ஏறி பார்த்தபோது மெஹருண்கதுன் தனது சால்வையால் தூக்குமாட்டி தொங்கிக் கொண்டிருந்தார்.
பெருந்துறை:
ஜார்கண்ட் மாநிலம் சுந்தர்படை மாவட்டம் சாந்தனா பகுதியை சேர்ந்தவர் ராம்ஜன் மியான். இவர் தனது மனைவி தமீனா பிவி, மகள் மெஹருண்கதுன் (வயது 13), மகன் பிரோஜ்அன்சாரி ஆகியோருடன் கடந்த 5 வருடமாக பெருந்துறை கோவை மெயின் ரோடு, கடப்பம்படை பகுதியில் குடியிருந்து வருகிறார்.
கணவன், மனைவி இருவரும் பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் மாவு கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்றனர். மகளும், மகனும் வீட்டில் தனியே இருந்துள்ளனர்.
இந்நிலையில் மாலை குளியல் அறைக்கு சென்ற சிறுமி மெஹருண்கதுன் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அவரது தம்பி பிரோஜ் அன்சாரி குளியல் அறை கதவை தட்டியுள்ளார். கதவு திறக்கப்படாததால் கதவின் மேலே ஏறி பார்த்தபோது மெஹருண்கதுன் தனது சால்வையால் தூக்குமாட்டி தொங்கிக் கொண்டிருந்தார்.
உடனடியாக பிரோஜ் அன்சாரி பெற்றோருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து கணவன்-மனைவி வீட்டிற்கு வந்து தூக்குமாட்டி தொங்கி கொண்டிருந்த தனது மகளை கீழே இறக்கி பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.
கடந்த 4 நாட்களாக மெஹருண்கதுன் வயிற்று வலி ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வயிற்று வலியின் காரண–மாக தூக்கு மாட்டி இறந்து விட்டதாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்