search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசுமை எரிசக்தி"

    • உலகம் வாழ்வதற்கு கடுமையான இடமாக மாறி விட்டது என்றார் ஒலாப்
    • உலகெங்கிலும் மக்கள் ஜெர்மனியிடம் எதிர்பார்க்கிறார்கள் என்றார் ஒலாப்

    புத்தாண்டையொட்டி ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) தனது நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    அதில் அவர் தெரிவித்ததாவது:

    பல துன்பங்கள்; பெரும் ரத்த சேதம். மின்னல் வேகத்தில் நமது உலகம் முன்பை விட வாழ்வதற்கு கடுமையான இடமாக மாறி விட்டது. ரஷிய-உக்ரைன் போர், அதிகரிக்கும் எரிபொருள் விலை, ரஷியாவினால் ஏற்படுத்தப்பட்ட எரிவாயு தடை, இஸ்ரேல்-ஹமாஸ் போர் உள்ளிட்ட பல கவலையளிக்கும் நிகழ்வுகள். ஆனால், ஜெர்மனியர்களான நாம் அனைத்தையும் வெற்றிகரமாக கடந்து விடுவோம்.

    விலைவாசி குறைந்துள்ளது. ஊதியம் மற்றும் பென்சன் உயர்ந்துள்ளது. எரிபொருள் தேவையான அளவு கையிருப்பு உள்ளது. மக்கள் மேல் வரிவிதிப்பு குறைந்துள்ளது.

    போக்குவரத்திலும், பசுமை எரிசக்தியிலும் அரசு முதலீடு செய்து வருகிறது.

    நாட்டை முன்னே கொண்டு செல்ல மக்கள் அனைவரும் ஒன்றாக உழைக்க வேண்டும். ஐரோப்பாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் மக்கள் நம்மிடம் அதை எதிர்பார்க்கிறார்கள். எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்.

    இவ்வாறு ஒலாப் கூறினார்.

    ×