என் மலர்
நீங்கள் தேடியது "Europeans"
- பாரீஸ் ஒலிம்பிக்கில் வெறும் கண் கண்ணாடியுடன் 51 வயதான யூசுப் வெள்ளிப் மெடலை தட்டிச் சென்றார்.
- இந்த வெள்ளி பதக்கம் தான் யூசுப் ஒலிம்பிக்கில் வெல்லும் முதல் பதக்கமாகும்.
பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் துருக்கியை சேர்ந்த யூசுப் டிகேக் - செவ்வல் இலைதா தர்ஹான் ஜோடி வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.
ஒரு கையை பாக்கெட்டில் விட்டுக்கொண்டு, ஒற்றைக் கையில் எந்த விதமான சிறப்பு சாதனங்களையும் பயன்படுத்தாமல் வெறும் கண் கண்ணாடியுடன் சர்வ சாதாரணமாக 51 வயதான யூசுப் வெள்ளிப் மெடலை தட்டிச் சென்ற விதம் அனைவரையும் கவர்ந்தது. இணையத்தில் யூசுப்பின் புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், துருக்கி வீரர் யூசுப் டிகெக், இஸ்தான்புல்லில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் வீரர்கள் அணியும் எந்த வித உபகரணங்களும் அணியாமல் அசால்டாக குறி பார்த்து சுட்டு உலகம் முழுக்க வைரலான யூசுப், இந்தப் போட்டியிலும் அதே போல் பங்கேற்று தங்கத்தை தட்டிச் சென்றார்.
- உலகம் வாழ்வதற்கு கடுமையான இடமாக மாறி விட்டது என்றார் ஒலாப்
- உலகெங்கிலும் மக்கள் ஜெர்மனியிடம் எதிர்பார்க்கிறார்கள் என்றார் ஒலாப்
புத்தாண்டையொட்டி ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) தனது நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அதில் அவர் தெரிவித்ததாவது:
பல துன்பங்கள்; பெரும் ரத்த சேதம். மின்னல் வேகத்தில் நமது உலகம் முன்பை விட வாழ்வதற்கு கடுமையான இடமாக மாறி விட்டது. ரஷிய-உக்ரைன் போர், அதிகரிக்கும் எரிபொருள் விலை, ரஷியாவினால் ஏற்படுத்தப்பட்ட எரிவாயு தடை, இஸ்ரேல்-ஹமாஸ் போர் உள்ளிட்ட பல கவலையளிக்கும் நிகழ்வுகள். ஆனால், ஜெர்மனியர்களான நாம் அனைத்தையும் வெற்றிகரமாக கடந்து விடுவோம்.
விலைவாசி குறைந்துள்ளது. ஊதியம் மற்றும் பென்சன் உயர்ந்துள்ளது. எரிபொருள் தேவையான அளவு கையிருப்பு உள்ளது. மக்கள் மேல் வரிவிதிப்பு குறைந்துள்ளது.
போக்குவரத்திலும், பசுமை எரிசக்தியிலும் அரசு முதலீடு செய்து வருகிறது.
நாட்டை முன்னே கொண்டு செல்ல மக்கள் அனைவரும் ஒன்றாக உழைக்க வேண்டும். ஐரோப்பாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் மக்கள் நம்மிடம் அதை எதிர்பார்க்கிறார்கள். எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்.
இவ்வாறு ஒலாப் கூறினார்.






