search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசுமாடு மீட்பு"

    • கடலூர் தானம் நகரை சேர்ந்தவர் ஜோதி. பசு மாடு ஒன்றை வளர்த்து வருகிறார்.
    • தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து மீட்டனர்.

    கடலூர்: 

    கடலூர் தானம் நகரை சேர்ந்தவர் ஜோதி. பசு மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை பசுமாடு, அதே பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜோதி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த பசுமாட்டை கழிவுநீர் கால்வாய்க்குள் இருந்து மீட்க முயன்றார். ஆனால் பசுமாட்டை மீட்க முடியவில்லை. இது குறித்து கடலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து கழிவுநீர் கால்வாயில் விழுந்த பசுமாட்டை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

    • தடுப்புகள் அமைக்க வேண்டும்
    • ெபாதுமக்கள் வலியுறுத்தல்

    நெமிலி:

    பனப்பாக்கம் பேரூராட்சி, அண்ணா நகரில் வசித்து வருபவர் வேலு (வயது 30). இவருக்கு சொந்தமான பசு மாடு நேற்று அண்ணா நகரில் உள்ள கழிவு நீர் கால்வாயில் தவறிவிழுந் துவிட்டது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    பின்பு பொக்லைன் எந்திரம் வரவழைக்கபட்டு சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு கழிவுநீர் கால்வாயின் ஒரு பக்கத்தை உடைத்து பசுவை மீட்டனர். பசுவை மீட்கும் போது அதன் ஒரு கொம்பு உடைந்ததால் கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கழிவுநீர் கால்வாய் ஓரங்களில் சிறிய தடுப்புகள் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    ×