search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கழிவுநீர் கால்வாயில் விழுந்த பசுமாடு மீட்பு
    X

    கழிவுநீர் கால்வாயில் விழுந்த பசுமாடு மீட்பு

    • தடுப்புகள் அமைக்க வேண்டும்
    • ெபாதுமக்கள் வலியுறுத்தல்

    நெமிலி:

    பனப்பாக்கம் பேரூராட்சி, அண்ணா நகரில் வசித்து வருபவர் வேலு (வயது 30). இவருக்கு சொந்தமான பசு மாடு நேற்று அண்ணா நகரில் உள்ள கழிவு நீர் கால்வாயில் தவறிவிழுந் துவிட்டது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    பின்பு பொக்லைன் எந்திரம் வரவழைக்கபட்டு சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு கழிவுநீர் கால்வாயின் ஒரு பக்கத்தை உடைத்து பசுவை மீட்டனர். பசுவை மீட்கும் போது அதன் ஒரு கொம்பு உடைந்ததால் கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கழிவுநீர் கால்வாய் ஓரங்களில் சிறிய தடுப்புகள் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    Next Story
    ×