search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேரடி சேர்க்கை"

    • பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகையாக வழங்கப்படும்.
    • புதுமைபெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 கூடுதலாக உதவி தொகை கிடைக்கும்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    ஓசூர் மற்றும் தேன்கனிக் கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் 2023-24-ம் கல்வியாண்டில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளுக்கு மாணவர் நேரடி சேர்க்கை மேற்கொள்ள வருகிற 31-ந் தேதி கால அவகாசம் நீட்டித்து அனுமதி வழங்கப் பட்டு உள்ளது. மேற்காணும் அரசு தொழிற்பயிற்சி நிலை யங்களில் படிக்க விரும்பும் பயிற்சியாளர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்க ளுடன் வருகிற 31-ந் தேதிக்குள் நேரில் வந்து உரிய கட்டணம் செலுத்தி, நேரடி சேர்க்கையில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக ்கொள்ளப்படுகிறது.

    இந்த பயிற்சி காலத்தின் போது, பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகையாக வழங்கப்படும். இதை தவிர விலையில்லா பாடப்புத்தகம், வரைபட கருவிகள், மடிகணினி, சீருடை, சைக்கிள் பஸ் பயண அட்டை, ஷு ஆகியவை வழங்கப்படும். அரசு பள்ளியில் படித்த மாணவி களுக்கு புதுமைபெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 கூடுதலாக உதவி தொகை கிடைக்கும். ஆண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உண்டு. பெண் பயிற்சி யாளர்களுக்கு அருகில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி விடுதியில் தங்குவதற்கு பரிந்துரை செய்யப்படும். மேலும், பயிற்சி முடித்து செல்லும் பயிற்சி யாளர்களுக்கு 100 சதவிகிதம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற தரப்படுகிறது.

    எனவே, தகுதியுள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயனடையலாம் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

    • பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு இன்டர்சிப் டிரெய்னிங் வழங்கபடுகிறது.
    • ரூ.15,000 முதல் ரூ.20,000 வரையிலான சம்பளத்துடன் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டையில் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேருவதற்கு 24.5.2023 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு ,12-ம் வகுப்பு,கல்லூரி மாணவ, மாணவிகள் பல்வேறு பொறியியல், மேம்பட்ட தொழில் நுட்பபடிப்புகளான இன்டஸ்ட்ரி 4.0 மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.

    டாடா டெக்னாலஜிஸ் மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து தமிழ்நாட்டில் உள்ள 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை ரூ.2877.43 கோடி செலவீட்டில் உலகத்தரம் வாய்ந்த இன்டஸ்ட்ரி 4.0 தரத்திலான டெக் சென்டர் – தொழில் நுட்ப மையங்களை உருவாக்கி உள்ளது.இத்திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் தொழில் நுட்ப மையமாக மாற்றப்பட்டுள்ளது. மேற்கண்ட தொழில் நுட்ப மையத்தில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகள் மற்றும் இதர தொழிற்பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    ஐடிஐ.யில் பயிற்சி பெறுபவர்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன் தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள் மற்றும் குறிப்பிட்ட சில தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு டூல் கிட், தையல் எந்திரம் விலையில்லாமல் வழங்கப்படும். ஆண் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.750 மற்றும் தகுதி வாய்ந்த பெண் பயிற்சியாளர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்துடன் இணைந்து மாதாந்திர உதவித்தொகை ரூ.1750 வழங்கப்படும். மேலும் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு இன்டர்சிப் டிரெய்னிங் மற்றும் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரையிலான சம்பளத்துடன் முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.

    விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டையில் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் குறிப்பிட்ட சில தொழிற்பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு நேரடி சேர்க்கை நடைபெற்று வருவதால், தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையத்தில் நேரடி சேர்க்கைக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0421-2429201,04258-230307 மற்றும் 04252-22334 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என திருப்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பிரபு தெரிவித்துள்ளார்.

    • அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள காலியிடங்களில் பயிற்சியில் சேர நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    • தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம், மேட்டூர், கருமந்துறை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள காலியிடங்களில் பயிற்சியில் சேர நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க உதவிடும் வகையில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை உதவிமையம் செயல்பட்டு வருகிறது.

    நேரடி சேர்க்கைக்கு வரும்பொழுது செல்போன், ஈ மெயில் ஐ.டி., ஆதார் எண், அசல் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், முன்னுரிமை கோரினால் முன்னுரிமை சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும். சாதிச் சான்றிதழ் இல்லையெனில் பொதுப்பிரிவில் தேர்ந்தெ டுக்கப்படுவார்கள். விண்ணப்பக்கட்டணம் மற்றும் இதரக் கட்டணம் ரூ.245 ஆகும், பயிற்சிக் கட்டணம் இல்லை.

    அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடக் கருவி, காலணி, பஸ்பாஸ், மாதாந்திர உதவித்தொகை ரூ.750 மற்றும் இதர அரசுச் சலுகைகள் வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்த பின் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலை பெற்றுத் தரப்படும். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும்.

    நேரடி சேர்க்கை வருகிற 30-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சேலத்தில் குறுகிய கால தொழிற்பயிற்சிக்கான சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. ஓவ்வொரு நாளும் முதலில் வருபவர்களுக்கு முன்னிரிமை என்பதால் உடனடியாக பயிற்சியில் சேர்ந்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • 30-ந் தேதி வரை நடக்கிறது.
    • பயிற்சி கட்டணம் இலவசம்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் உப்பட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கூடலூர் உப்பட்டியில் உள்ள பழங்குடியினருக்கான அரசு ஐ.டி.ஐ., யில் காலியாக உள்ள தொழிற்பயிற்சி இடங்களுக்கு நேரடி சேர்க்கை வரும் 30-ந் தேதி வரை நடக்கிறது. தகுதியான பழங்குடியின மாணவ, மாணவிகள் மற்றும் இதர பிரிவு மாணவ, மாணவிகள் (பொதுப்பிரிவினரை தவிர) அரசு விதிமுறைகளின் படி தேர்வு செய்யப்பட உள்ளனர். இதன்படி பிட்டர், கம்மியர் மோட்டார் வண்டி ஆகிய 2 ஆண்டு தொழிற் பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியும், ஒயர்மேன், பிளம்பர், வெல்டர் ஆகிய பிரிவுகளுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் சான்றிதழ்களை அந்தந்த பள்ளி தலைமையாசிரியரிடம் இருந்து பெறப்பட்ட மதிப்பெண் சான்று மற்றும் இதர சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம். மதிப்பெண் அடிப்படையிலும் அரசு விதிகளின் படி கலந்தாய்வு சேர்க்கையின் மூலம் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பயிற்சி கட்டணம் இலவசம். அனைத்து மாணவர்களுக்கும் ரூ.750 வீதம் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும். உணவுடன் கூடிய தங்கும் விடுதி வசதி உள்ளது. பயிற்சியின் முடிவில் தேசிய தொழிற் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு உப்பட்டி ஐ.டி.ஐ., முதல்வரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கடலூர் மாவட்டத்தில் தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.
    • நாளை மறுநாள் (30- ந்தேதி) முதல் நேரடி சேர்க்கை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

     கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கடலூர், கடலூர் (மகளிர்), சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும்; நெய்வேலி தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2022 -ம் ஆண்டு பயிற்சியாளர்கள் சேர்க்கை செய்ய முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. மீதமுள்ள காலியிடங்களை நிரப்பிடும் பொருட்டுநாளை மறுநாள் (30- ந்தேதி) முதல் நேரடி சேர்க்கை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் முதற் கட்ட கலந்தாய்விற்கு விண்ணப்பித்து தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவு ஒதுக்கீடு பெறாதவர்கள் மற்றும் தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவு ஒதுக்கீடு பெற்று கட்டணம் செலுத்தி சேர்ககையை உறுதி செய்யாதவர்கள் ஆகியோர் நேரடி சேர்க்கையில் காலியாக உள்ள இடங்களில் சேர்ந்து கொள்ளலாம். மேலும் அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலைங்களில் உள்ள தொழிற் பிரிவு விபரங்கள் அறிய இணையதளத்தினை பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த இணையதள வழியிலான 2-ம் கட்ட கலந்தாய்வு மற்றும் நேரடி சேர்க்கையில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

    ×