search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீண்ட நாள் விடுப்பு"

    • தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
    • 90 நாட்கள் கல்லூரிக்கு வராத மாணவர்கள் நீண்டகால விடுமுறையில் இருப்பதாக கருதப்படுவர்.

    திருப்பூர்:

    அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    சமூகநலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை சார்பில் இதற்கான செயல்பாடுகள் மேற்கொள்ள ப்படுகின்றன. முதலாமாண்டில் சேர்ந்துள்ள மாணவிகளின் விபரங்கள், இணையதளத்தில் உள்ளீடு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் 90 நாட்கள் கல்லூரிக்கு வராத மாணவர்கள் நீண்டகால விடுமுறையில் இருப்பதாக கருதப்படுவர். இம்மாணவிகளுக்கு உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்படும்.

    இடைநின்றவர்கள், மாற்றுச்சான்றிதழ் பெற்றவர்கள் பட்டியலை தொகுத்து ஆண்டுக்கு இருமுறை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இம்மாணவிகளுக்கு உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்படும் என கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

    • பள்ளிகளில் 15 நாட்களுக்கு மேல் விடுப்பில் உள்ளவர்களை பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
    • வீட்டிற்கே சென்று பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தொடர்ந்து பள்ளிக்கு வரவழைக்க முடிவு.

    தாராபுரம்:

    பள்ளிகளில் 15 நாட்களுக்கு மேல் விடுப்பில் உள்ளவர்களை இடைநிற்றல் தழுவ வாய்ப்புள்ளவர்களாக கருதி பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பில் இடைநிற்றல் தழுவியோருக்கான சிறப்பு கணக்கெடுப்பு இம்மாத தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்டது.வழக்கமாக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆகஸ்டு 1ந் தேதி வரை நடத்த வேண்டும்.

    இதற்கு பிறகும் பள்ளிகளில் சேராதவர்களை கண்டறிந்து, அவர்கள் தொடர்ந்து கல்வி பெற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.சமீபத்தில் சுதந்திர தினத்தன்று நடந்த கிராமசபை கூட்டத்திலும், இடைநிற்றல் இன்றி குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது குறித்து வலியுறுத்தப்பட்டது.இந்நிலையில் பள்ளிக்கு தொடர்ந்து 15 நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்தவர்களின் பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவர்கள் இடைநிற்றல் தழுவ வாய்ப்புள்ளதால் பள்ளி செல்லா குழந்தைகளுக்கான சிறப்பு கணக்கெடுப்பு திட்டத்தின் வாயிலாக உரிய மாணவர்களின் வீட்டிற்கே சென்று பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தொடர்ந்து பள்ளிக்கு வரவழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×