search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீட் தேர்வு முடிவுகள்"

    • தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம்.
    • நீட் தேர்வில் 4 பேர் 720க்கு 715 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வை மாணவ, மாணவிகள் எழுதினர்.

    தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர். நீட் தேர்வு விடைத்தாள் ஒ.எப்.ஆர். ஷீட் இணையத்தில் கடந்த மாதம் 31-ந்தேதி வெளியிடப்பட்டது. நீட் தேர்வு முடிவுகள் நேற்று காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் மாலை 6 மணி முதல் 8 மணிக்குள் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகததால், இந்த தேர்வை எழுதியிருந்த மாணவ மாணவிகள் மத்தியில் பதற்றம் அதிகரித்தது.

    இந்த சூழலில் நீட் தேர்வு முடிவுகளை நேற்று இரவு தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. அதன்படி தேர்வு எழுதிய 17,64,571 பேரில் 9,93,069 பேர் (56.3 சதவீதம்) தகுதி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றதில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம். இதில் 4 பேர் 720க்கு 715 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    இருப்பினும், டை பிரேக்கர் முறையில் ராஜஸ்தான் மாணவி தனிஷ்கா முதலிடம் பிடித்தார். டெல்லியைச் சேர்ந்த வத்சா ஆஷிஷ் பத்ரா மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த ஹிருஷிகேஷ் நாகபூஷன் கங்குலே ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தனர். ஒன்பது பேர் 720க்கு 710 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 6வது முதல் 14 இடங்களை பிடித்தனர்.

    தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://neet.nta.nic.in என்கிற முகவரியில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவினை பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்களின் பெயர், பாடவாரியாக பெற்ற மொத்த மதிப்பெண் மற்றும் அதன் சதவீதம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.

    • சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு தாமதம் ஆனதால், நீட் தேர்வு முடிவும் காலதாமதம் ஆனது.
    • மாணவர்கள் இணையதளம் மூலம் தேர்வு முடிவை பதிவிறக்கம் செய்யலாம்.

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட்நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. நடப்பாண்டிற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் இந்த தேர்வை ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர்.

    சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு தாமதம் ஆனதை தொடர்ந்து நீட் தேர்வு முடிவும் கால தாமதம் ஆனது. இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று நண்பகல் 12 மணியளவில் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அத்துடன் குறியீட்டு விடைத்தாள் வரும் 30-ந் தேதி வெளியாகும்.

    மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://neet.nta.nic.in என்கிற முகவரியில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவினை பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்களின் பெயர், பாடவாரியாக பெற்ற மொத்த மதிப்பெண் மற்றும் அதன் சதவீதம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். 

    • ஆகஸ்டு 30-ம் தேதிக்குள் நீட் இளநிலை தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்படும்.
    • நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தமிழகத்தில் பி.இ பொதுப்பிரிவினருக்கான கலந்தாய் தொடங்க உள்ளது.

    நீட் இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7-ம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

    இதற்கிடையே, ஆகஸ்டு 30-ம் தேதிக்குள் நீட் இளநிலை தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்படுகிறது.

    ஜூலை 17-ம் தேதி நடந்த நீட் தேர்வை 18.72 லட்சம் பேர் எழுதிய நிலையில் செப்டம்பர் 7-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

    செப்டம்பர் 7ல் நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தமிழகத்தில் பி.இ பொதுப்பிரிவினருக்கான கலந்தாய் தொடங்க உள்ளது.

    ×