search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலங்கள் மீட்பு"

    • பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான சுமார் 4 ஏக்கர் நிலங்களை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்வதாக அறநிலையத்துறைக்கு புகார் வந்தது.
    • அறநிலையத்துறையினர் சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலங்களை மீட்டனர்.

    பழனி:

    பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமாக பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பல ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் குத்தகை முறையில் விவசாயம் செய்கின்றனர். இந்நிலையில் சண்முகநதி, கோதைமங்கலம் ஆகிய பகுதியில் முருகன் கோவிலுக்கு சொந்தமான சுமார் 4 ஏக்கர் நிலங்களை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்வதாக அறநிலையத்துறைக்கு புகார் வந்தது.

    அதன்பேரில் திண்டுக்கல் அறநிலையத்துறை உதவி ஆணையர் சுரேஷ், தாசில்தார் லட்சுமி (கோவில் நிலம்), முருகன் கோவில் உதவி ஆணையர்லட்சுமி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்றனர்.

    பின்னர் நிலஅளவீடு செய்து கோவில் நிலங்களை மீட்டனர். தொடர்ந்து இது கோவிலுக்கு சொந்தமானது, யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்ற அறிவிப்பு பலகையை வைத்தனர். இதுகுறித்து அறநிலையத்துறையினர் கூறும்போது, மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு ரூ.2 கோடி ஆகும் என்றனர்.

    • கோவில்கள் பெயரில் மீண்டும் பட்டா மாறுதல் செய்யும் பணிகளும் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
    • நூல்கள் எதிர்காலத்தில் கோவில்களின் சொத்துகளை பாதுகாக்க அடிப்படை ஆதாரமாக விளங்கும்.

    சென்னை:

    சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோவில்களின் சொத்துகள் விவரம் அடங்கிய 2-வது புத்தகத்தை வெளியிட்டார்.

    அப்போது நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற 07.05.2021 முதல் 31.03.2022 வரை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 167 கோவில்களின் ரூ.2,566.94 கோடி மதிப்பிலான சொத்துகள் குறித்த விவரங்களை தொகுத்து, வெளிப்படைத்தன்மையுடன் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் முதல் புத்தகம் 17.05.2022 அன்று வெளியிட்டோம்.

    அதனை தொடர்ந்து, 01.04.2022 முதல் 31.03.2023 வரையிலான காலத்தில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோவில் சொத்துகளின் விவரம், தனிநபர் பெயரிலும், கணினி சிட்டாவிலும் தவறுதலாக பதிவான பட்டா மாறுதல்களை சரிசெய்து கோவில்கள் பெயரில் மீண்டும் பட்டா மாறுதல் செய்யப்பட்ட விவரம் ஆகியவற்றை உள்ளடக்கிய 2-வது புத்தகத்தை இன்று வெளியிட்டு இருக்கிறோம்.

    இப்புத்தகத்தில் 01.4.2022 முதல் 31.3.2023 வரையிலான காலத்தில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 330 கோவில்களுக்குச் சொந்தமான ரூ.1,692.29 கோடி மதிப்பிலான 3386.06 ஏக்கர் நிலம், மனை, கட்டிடம் மற்றும் திருக்குளம் விவரங்கள், நிலவுடைமை பதிவு மேம்பாட்டு திட்ட நடவடிக்கையின் போது தனிநபர் பெயரில் தவறுதலாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட நிலத்திற்கு மீண்டும் பட்டா பெற்ற 145 கோவில்களுக்குச் சொந்தமான 801.63 ஏக்கர் நிலங்களின் விவரம், கணினி சிட்டாவில் பதிவான தவறுகளை சரிசெய்து 180 கோவில்களுக்கு சொந்தமான 1,434.43 ஏக்கர் நிலங்களுக்கு கோவில் பெயரில் பட்டா பெற்ற விவரம், நவீன தொழில்நுட்ப கருவியான டி.ஜி.பி.எஸ். மூலம் 74514.48 ஏக்கர் கோவில் நிலங்களில் அளவீடு செய்யப்பட்டுள்ள விவரம், அவற்றின் புகைப்படங்கள், அதுகுறித்து நாளிதழ்களில் வெளிவந்த செய்திகள் அனைத்தும் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. இந்நூல்கள் எதிர்காலத்தில் கோவில்களின் சொத்துகளை பாதுகாக்க அடிப்படை ஆதாரமாக விளங்கும்.

    கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்கும் பணிகளும், தனிநபர் பெயரிலும், கணினி சிட்டாவிலும் தவறுதலாக பதிவான பட்டா மாறுதல்களை சரிசெய்து கோவில்கள் பெயரில் மீண்டும் பட்டா மாறுதல் செய்யும் பணிகளும் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்தமாக, கடந்த 07.05.2021 முதல் 07.09.2023 வரை 653 கோவில்களுக்கு சொந்தமான ரூ.5,171 கோடி மதிப்பீட்டிலான 5,721.19 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு உள்ளதோடு, நவீன தொழில்நுட்ப கருவியான டி.ஜி.பி.எஸ். ரோவர் மூலம் 1,48,956.20 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்து பாதுகாக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது முதன்மைச் செயலர் டாக்டர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் சங்கர், ந.திருமகள், ஹரிப் ரியா, தனி அலுவலர்கள் விஜயா, ஜானகி, குமரேசன் உடன் இருந்தனர்.

    • செல்வ விநாயகர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.
    • ஆக்கிரமிப்பு செய்தவர்கள் நிலங்களை ஒப்படைப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதி மொழி அளித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் மேலசித்தர்காடு கிராமம், செல்வ விநாயகர் கோவிலுக்கு சொந்தமான நன்செய் வகைபாடுடைய 2.51 ஏக்கர் சென்ட் , புன்செய் வகைபாடுடைய 0.02 சென்ட் பரப்பளவு ஆக மொத்தம் 2.53 ஏக்கர் பரப்பளவு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.

    இதையடுத்து ஆக்கிரமிப்பு நபர்களிடம் மேற்படி நிலங்களைகோயில் வசம் ஒப்படைக்காவிடில் 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் இந்து சமய மற்றும் அறக்கொடைகள் சட்டப்பிரிவு 78-ன் கீழ் ஆக்கிரமிப்புதாரர்களை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கோவில் தக்கார்/ஆய்வாளர் அறிவுறுத்தினார்.

    அதன் அடிப்படையில் மேற்படி நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தாங்களாகவே முன் வந்து நிலங்களை கோவில் வசம் ஒப்படைப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதி மொழி அளித்தனர்.

    இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா தலைமையில், தஞ்சாவூர் ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் சங்கர் முன்னிலையில் கோவில் தக்கார் / ஆய்வாளர் கீதாபாய், சிறப்பு அலுவலர்கள் அசோக்குமார், பிருந்தாதேவி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கோயில் பணியாளர்களின் மூலம் மொத்தம் 2 ஏக்கர் 53 சென்ட் பரப்பளவு கொண்ட சுமார் ரூ.3795000 மதிப்புள்ள நிலச்சொத்துக்கள் மீட்கப்பட்டது. பின்னர் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு, மேற்படி கோயிலின் சுவாதீனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.

    மீட்டெடுக்கப்பட்டுள்ளகோயில் நிலங்கள் விரைவில் பொது ஏலத்திற்குக்கொண்டு வரப்படும். இந்து சமய அறநிலையத்துறையின் இது போன்ற கோயில் நிலங்கள் மீட்டெடுப்பு நடவடிக்கை கள் தொடரும் என தெரிவிக்கப்படடன.

    • கொப்பம்பட்டியில் ரூ.18 கோடி மதிப்பிலான 60 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டது
    • வருகின்ற 14ந் தேதியன்று பொது ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

    உப்பிலியபுரம்:

    உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கொப்பம்பட்டியில் அமைந்துள்ளது ஸ்ரீகுங்குமாம்பிகை உடனுறை ஸ்ரீசப்தரீஸ்வரர் திருக்கோயில். இத்திருக்கோயிலுக்கு சொந்தமான மானிய நிலங்கள் கொப்பம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அமைந்துள்ளன. அவ்வாறு உள்ள விளை நிலங்களில் சுமார் 60 ஏக்கர் நிலங்களின் குத்தகை பணம் முறையாக கட்டப்படாமல், ஆக்கிரமிப்பில் இருப்பது தெரிய வந்தது.

    அதனையடுத்து திருச்சி இணை ஆணையர் செல்வராஜ் உத்தரவின்படி பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்தன் தலைமையில் பெரம்பலூர் தனி வட்டாட்சியர் பிரகாசம், சரக ஆய்வாளர் தமிழரசி, திருக்கோயில் செயல் அலுவலர் சௌந்தரபாண்டியன், எழுத்தர்கள் செல்வராஜ், சதாசிவம், கோயில் பணியாளர்கள் மற்றும் நில அளவையர் அஜித்குமார், லால் கிருஷ்ணா ஆகியோர் முன்னிலையில் துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உப்பிலியபுரம் சப்இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் உதவியுடன் ஆக்கிரமிப்புதாரர்களிடமிருந்து நிலங்களை மீட்கும் பணி தொடங்கியது.

    சுமார் ரூ.18.15 கோடி மதிப்பிலான கோயிலுக்கு சொந்தமான 60.51 ஏக்கர் விளைநிலங்கள் மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது. மேற்கண்ட விளைநிலங்களை இந்து அறநிலையத் துறையினர் முறையாக ஏலம் விட அறிவித்ததன் பேரில் வருகின்ற 14ந் தேதியன்று பொது ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


    ×