search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிறைபுத்தரிசி பூஜை"

    • பக்தர்களுக்கு நெற்கதிர் பிரசாதமாக வழங்கப்பட்டது
    • நாடு செழிப்படைய வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் நிறைபுத்தரிசி பூஜை

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நெற்பயிர்கள் செழித்தோங்கி அறுவடை அதிகரித்து நாடு செழிப்படைய வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் நிறைபுத்தரிசி பூஜை இன்று நடைபெற்றது.

    இதையொட்டி அதி காலையில் அறநிலை யத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்க திர்கள் அறுவடை செய்யப்பட்டு, அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    அதன் பின்னர் நெற்கதிர்கள் மேள தாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மூலஸ்தான மண்டபத்தில் உள்ள பகவதி அம்மன் முன்பு நெற்கதிர்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்பட்டது. பின்னர் அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    இந்த நெற்கதிர்களை குமரி மாவட்ட திருக்கோ வில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் வழங்கி னார். நிகழ்ச்சியில் நாகர்கோ வில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த், கொட்டாரம் பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலர் வைகுண்ட பெருமாள், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பக்தர்கள் நற்பணி சங்க தலைவர் பால்சாமி, பொருளாளர் அரிகிருஷ்ணபெருமாள், பகவதி அம்மன் பக்தர்கள் சங்க செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்பட பல கோவில்களில் ஆடி நிறைப்புத்தரிசி பூஜை இன்று காலை நடந்தது. இதையொட்டி இந்த கோவில்களில் பக்தர்களுக்கு நெற்கதிர் பிரசாதமாக வழங்கப் பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோ வில்களின் இணை ஆணையர் ரத்தின வேல்பாண்டியன் தலைமை யில் அறங்காவலர் குழுவினர் மற்றும் அந்தந்த கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    • கோவில்களில் நிறை புத்தரிசி பூஜை நாளை (10-ந்தேதி) நடக்கிறது.
    • சந்தன காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயன்சாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் ஆகிய 4 கோவில்களில் நிறை புத்தரிசி பூஜை நாளை (10-ந்தேதி) நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா, நவராத்திரி திருவிழா, ஆடி அமாவாசை, தை அமா வாசை, திருக்கார்த்திகை தீபத் திருவிழா, சித்ரா பவுர்ணமி, மார்கழி ஊஞ்சல் உற்சவம், சித்திரை விசு கனி காணுதல் உள்ளிட்ட பல்வேறு விழாக்களும், வழிபாடுகளும் கோவில் நிர்வாகம் சார்பில் நிச்சயிக்கப்பட்ட தேதியில் நடைபெறும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை மட்டும் கேரள மாநிலம் திருவனந்த புரத்தில் உள்ள திருவி தாங்கூர் சமஸ்தானத்தின் கவுடியர் அரண்மனை சார்பில் நிச்சயிக்கப்படும் தேதியில் நடைபெறும்.

    நெற்பயிர்கள் செழித்தோங்கி அறுவடை அதிகரித்து நாடு செழிப்ப டைய வேண்டும் என்ப தற்காக இந்த நிறைபுத்தரிசி பூஜை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி நிறைபுத்தரிசி பூஜை நாளை அதிகாலை 5.30 மணி முதல் 6.15 மணி வரையிலான சுபமுகூர்த்த வேளையில் நடக்கிறது.

    அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கட்டுக்கட்டாக கட்டி கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டுவந்து சேர்க்கப்ப டும். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. அதன்பின்னர் நெற்கதிர்கள் மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. மூலஸ்தான மண்டபத்தில் உள்ள பகவதி அம்மன் முன் நெற்கதிர் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்படு கிறது. இந்த பூஜைகளை கோவில் மேல்சாந்திகள் நடத்துகின்றனர். சிறப்பு பூஜை முடிந்த பிறகு நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்படு கிறது. பின்னர் அந்த நெற்கதிர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    இந்த நெற்கதிரை பக்தர்கள் தங்களது வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கட்டி தொங்க விடுவார்கள். இவ்வாறு நெற்கதிர்களை கட்டி தொங்க விடுவதன் மூலம் அந்த ஆண்டு முழு வதும் செல்வச் செழிப்பு ஏற்படும், நெற்கதிர் மணி களை வயலில் தூவினால் அந்த போகம் சாகுபடி செழித்தோங்கும் என்பது ஐதீகம்.

    நிறை புத்தரிசி பூஜை வழிபாட்டுடன் கோவிலில் விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, உஷ பூஜை, பந்திரடி பூஜை, உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை, மாலையில் சாயரட்சை தீபாராதனை, இரவு அம்மன் பல்லக்கில் கோவில் உள் பிரகாரத்தில் வலம் வருதல், அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாரதனை ஆகியவைநடக்கிறது. நிறை புத்தரிசி பூஜையையொட்டி பகவதி அம்மனுக்கு தங்க கவசம் வைரக் கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் திருவாபரணங்கள் அணி விக்கப்பட்டு, சந்தன காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில் களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    • மேயர் மகேஷ் பக்தர்களுக்கு நெற்கதிர் பிரசாதமாக வழங்கினார்
    • அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்த நிகழ்ச்சி நடந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மற்றும் தை மாதங்களில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தை நிறைபுத்தரிசி பூஜை இன்றுஅதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரையிலான சுபமுகூர்த்த வேளையில் நடந்தது.

    இதையொட்டி இன்று அதிகாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்த நிகழ்ச்சிநடந்தது.பின்னர் பகவதி அம்மன்கோவிலில் மூலஸ்தானமண்டபத்தில் நெற்கதிர் கட்டுகளை வைத்து கோவில் மேல் சாந்தி சீனிவாசன் போற்றி பூஜைகள் நடத்தினார். அதன் பின்னர் பகவதி அம்மன் முன்பு நெற்கதிர் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர்அந்த நெற்கதிர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட் டது.

    இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நெற்க திர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார்.

    நிறை புத்தரிசி பூஜை வழி பாட்டுடன் கோவி லில் விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, உஷ பூஜை, பந்திரடி பூஜை, உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை போன்றவை நடந்தது.மாலையில் சாயரட்சை தீபாராதனை, இரவு அம்மன் பல்லக்கில் கோவில் உள் பிரகாரத்தில் வலம் வருதல், அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாரதனை ஆகியவை நடக்கிறது. நிறை புத்தரிசி பூஜையை யொட்டி பகவதி அம்மனுக்கு தங்க கவசம் வைரக் கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் நற்பணி சங்க தலைவர் பால்சாமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    ×