search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிறுவன ஊழியர் கைது"

    • பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    • 3 பவுன் செயினை பறித்தார்.

    கோவை

    கோவை மேட்டுப்பாளையம் ரோடு சேர்மன்ராஜ் நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி லட்சுமி (வயது 38).

    இவர் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் ரோடு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வந்தார்.

    அவர் கண்இமைக்கும் நேரத்தில் லட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் செயினை பறித்தார்.

    இதில் உஷாரான அவர் அந்த வாலிபரின் சட்டையை பிடித்தார். நிலைதடுமாறி அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.பின்னர் அவரை சாய்பாபா காலனி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பேரூர் ஆண்டிபாளையத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ராம்குமார் (26) என்பது தெரிய வந்தது. இவர் மீது ஏற்கனவே சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் 7 திருட்டு வழக்குகளும், மேற்கு அனைத்து மகளிர் போலீசில் போக்ேசா வழக்கும் பதிவாகி இருப்பது தெரிய வந்தது.

    பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட ராம்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×