search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிபா வைரஸ்"

    கேரளாவில், 'நிபா' வைரஸ் காய்ச்சலால் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்தது. #NipaVirus
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது. கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 11 பேர் உயிரிழந்து இருந்தனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 17 பேருக்கும் கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 பேருக்கும் நிபா வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது முதல்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இவர்களில் ஒருவர் நர்சு என்பது குறிப்பிடத்தக்கது.

    இதை தொடர்ந்து இந்த 19 பேரின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்காக புனேயில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டம் பரம்புரா பகுதியைச் சேர்ந்த மூசா என்பவர் சிகிச்சை பலனின்றி கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் இன்று உயிரிழந்தார். இதனால் நிபா வைரசுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்து உள்ளது.

    கேரளாவிற்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கேரளாவில் முக்கிய சுற்றுலா தலங்களில் குவிந்திருந்தனர்.

    கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் காய்ச்சலை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதற்கிடையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜீவ் சதானந்தன் கேரளாவிற்கு சுற்றுலா செல்பவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

    கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, கண்ணூர் ஆகிய 4 மாவட்டங்களில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்த மாவட்டங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும். கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    வைரஸ் காய்ச்சலுக்கான மருந்து, மாத்திரைகள் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அதிகளவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அவர், தெரிவித்துள்ளார்.

    நிபா வைரஸ் தாக்குதலுக்கு பலியான நர்சு லினிக்கு திருவனந்தபுரத்தில் நர்சுகள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான நர்சுகள் கலந்து கொண்டு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, மவுன அஞ்சலி செலுத்தினார்கள். #NipaVirus
    கேரளாவில் நிபா வைரசால் உயிரிழந்த செவிலியர் லினியின் கணவருக்கு அரசு வேலை மற்றும் அவரது இரண்டு குழந்தைகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது. #Lini #KeralaGovt #Nipahvirus
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வேகமாக பரவி வரும் 'நிபா' வைரஸ் காய்ச்சலுக்கு 10 பேர் உயிரிழந்தனர். அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்தியக்குழு விரைந்தது. நிபா வைரஸ் அறிகுறியுடன் 10-க்கும் மேற்பட்டோர் கோழிக்கோடு மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோய் தாக்கியவர்களுக்கு மருத்துவ உதவிகளை மேற்கொண்டு வந்த லினி என்ற நர்சும் நேற்று முன் தினம் காலையில் மரணமடைந்தார். அவருடைய சடலத்தை உறவினர்கள் யாரும் பார்க்கவில்லை. அவருக்கு இறுதிச்சடங்கு யாரும் செய்யவில்லை.

    இரண்டு பிஞ்சுக் குழந்தைகளை விட்டுப் பிரிந்த லினி, பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் கனிவான முறையில் சிகிச்சையளித்து வந்து உள்ளார். வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவும், பகலுமாக கண்விழித்து சிகிச்சையை அளித்து வந்து உள்ளார். அவருடைய உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



    கேரளாவில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து உயிரிழந்த செவிலி லினி கடைசிநேர உருக்கமான கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. செவிலி லினியின் கணவர் ப்க்ரைனில் பணிபுரிந்து வருகிறார். கடைசி நேரத்தில் தன்னுடைய கணவரை சந்திக்க முடியாது என்ற நிலையில் இந்த கடிதத்தை லினி எழுதி உள்ளார்.

    அதில், 'சாஜி சேட்டா, நான் எனது முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் உங்களைப் பார்க்க முடியும் என்ற நம்பிக்கைகூட எனக்கு கிடையாது. என்னை மன்னிக்கவும். நமது குழந்தைகளை பத்திரமாகப் பார்த்து கொள்ளுங்கள்.  விவரமறியா அந்த குழந்தைகளை உங்களுடன் வளைகுடா நாட்டுக்கே கூட்டி சென்றுவிடவும். நமது தந்தையைப் போல் அவர்களும் தனியாக இருக்கக்கூடாது' என லினி தன்னுடைய கடிதத்தை எழுதி உள்ளார்.

    லினியின் இரண்டு பிஞ்சுக் குழந்தைகள் தன்னுடைய தாயுக்கு என்ன நேரிட்டது என தெரியாமலே விளையாடுவது அனைவரது நெஞ்சையும் உடைய செய்கிறது. லினியின் சேவை மனப்பான்மையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், நிபா வைரசால் உயிரிழந்த செவிலியர் லினியின் கணவருக்கு அரசு பணி மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என கேரளா அரசு அறிவித்துள்ளது. மேலும், நிபா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. #Lini #KeralaGovt #Nipahvirus
    கேரளாவில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து உயிரிழந்த செவிலியர் தனது கணவருக்கு எழுதிய கடைசி கடிதம் பரவி வைரலாக வருகிறது. #Lini #KeralaNurse #Nipahvirus
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வேகமாக பரவி வரும் 'நிபா' வைரஸ் காய்ச்சலுக்கு 10 பேர் உயிரிழந்தனர். அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்தியக்குழு விரைந்தது. நிபா வைரஸ் அறிகுறியுடன் 10-க்கும் மேற்பட்டோர் கோழிக்கோடு மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோய் தாக்கியவர்களுக்கு மருத்துவ உதவிகளை மேற்கொண்டு வந்த லினி என்ற நர்சும் நேற்று காலையில் மரணமடைந்தார். அவருடைய சடலத்தை உறவினர்கள் யாரும் பார்க்கவில்லை. அவருக்கு இறுதிச்சடங்கு யாரும் செய்யவில்லை.

    இரண்டு பிஞ்சுக் குழந்தைகளை விட்டுப் பிரிந்த லினி, பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் கனிவான முறையில் சிகிச்சையளித்து வந்து உள்ளார். வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவும், பகலுமாக கண்விழித்து சிகிச்சையை அளித்து வந்து உள்ளார். அவருடைய உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வைரஸ் பரவல் காரணமாக உயிரிழந்தவர்களின் சடலத்தை ஒப்படைக்கவும் அச்சம் நிலவுகிறது, மாநில சுகாதாரத்துறையின் மூலம் தகனம் செய்யப்படுகிறது. கேரளாவில் முதன் முதலில் நிபா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கடும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கடுமையான காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாசக்கோளாறு போன்றவைதான் இந்த நோய்க்கான அறிகுறி ஆகும். இந்த வைரஸ் மூளையை தாக்குவதால், மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு ஒரு சில நாட்களிலேயே மரணம் ஏற்படுகிறது. இந்த நோய்க்கு இன்னும் தடுப்பூசி எதுவும் கண்டறியப்படவில்லை. நோய் தாக்கியவருக்கு அடிப்படை சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுகிறது.

    கோழிக்கோடு பெரம்பராவில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றிய 3 செவிலியர்களும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட செவிலியர்கள் நிபா வைரசால் பாதித்தவர்களுக்கு முதல்கட்ட சிகிச்சையை அளித்தார்கள் என தெரியவந்து உள்ளது. பெரம்பரா தாலுகா மருத்துவமனையில் இருந்து கோழிக்கோடு எம்சிஎச்க்கு அனுப்பப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தலைவலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது என தெரியவந்து உள்ளது, அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா என்பது உறுதிசெய்யப்படவில்லை.

    கேரளாவில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து உயிரிழந்த செவிலி லினி கடைசிநேர உருக்கமான கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. செவிலி லினியின் கணவர் ப்க்ரைனில் பணிபுரிந்து வருகிறார். கடைசி நேரத்தில் தன்னுடைய கணவரை சந்திக்க முடியாது என்ற நிலையில் இந்த கடிதத்தை லினி எழுதி உள்ளார்.

    அதில், 'சாஜி சேட்டா, நான் எனது முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் உங்களைப் பார்க்க முடியும் என்ற நம்பிக்கைகூட எனக்கு கிடையாது. என்னை மன்னிக்கவும். நமது குழந்தைகளை பத்திரமாகப் பார்த்து கொள்ளுங்கள்.  விவரமறியா அந்த குழந்தைகளை உங்களுடன் வளைகுடா நாட்டுக்கே கூட்டி சென்றுவிடவும். நமது தந்தையைப் போல் அவர்களும் தனியாக இருக்கக்கூடாது' என லினி தன்னுடைய கடிதத்தை எழுதி உள்ளார்.

    லினியின் இரண்டு பிஞ்சுக் குழந்தைகள் தன்னுடைய தாயுக்கு என்ன நேரிட்டது என தெரியாமலே விளையாடுவது அனைவரது நெஞ்சையும் உடைய செய்கிறது. நிபா வைரசால் உயிரிழந்த லினியின் மரணத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வருத்தம் தெரிவித்துள்ளார். #Lini #KeralaNurse #Nipahvirus
    ‘நிபா’ வைரஸ் நோய் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு பரவவில்லை. நோய் பராவமல் இருப்பதற்கு கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம் என்று சுகாதாரத்துறை இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #nipahvirus
    சென்னை:

    தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் ‘நிபா’ வைரஸ் குறித்த அச்சம் தேவையில்லை. எந்த வகையான காய்ச்சலாக இருந்தாலும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

    நிபா வைரஸ் 1998-99ம் ஆண்டுகளில் பன்றிகளில் உருவாகி அதன்பிறகு மற்ற விலங்குகளுக்கு வந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய நோயாக மாறியுள்ளது. அது கேரளாவில் பரவத் தொடங்கியதும் அங்குள்ள சுகாதாரத்துறையுடன் தொடர்பு கொண்டு கேட்டுள்ளோம்.

    அவர்கள் அதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக கூறி இருக்கிறார்கள். இது பரவக்கூடிய நோய் ஆகும். இந்த வைரஸ் கேரளாவில் இருந்து தமிழகம் பரவக் கூடிய வாய்ப்புகள் இல்லை.

    இது கேரளாவில் புதிதாக பரவுவதால் அதன் விவரங்களை வாங்கி அனைத்து பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர்களிடம் ஆய்வுக்காக கொடுத்துள்ளோம். நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் கண்காணிப்புக்கும் ஏற்பாடு செய்துள்ளோம்.

    இது கால்நடையில் இருந்து பரவக்கூடிய நோயாக இருப்பதால் கால்நடைத் துறையுடனும் கலந்து ஆலோசித்து வருகிறோம்.

    இது வவ்வால்களில் இருந்து பரவும் என்று சொல்வதால் அதை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். விலங்குகளுக்கு ஏற்படும் 70 சதவீத நோய்கள் மனிதர்களுக்கும் ஏற்படுகிறது. அதில் இதுவும் ஒன்று.

    நோய் பரவாமல் தடுக்க மனிதர்களின் இருப்பிடமும், பன்றிகளின் இருப்பிடமும் ஒன்றாக இருக்கக்கூடாது. ஏதாவது ஒரு காய்ச்சல் என்றால் சுகாதாரத் துறையின் கண்காணிப்பு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.

    தற்போது பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. கால்நடைகள் வளர்க்கப்படும் இடங்களில் கூடுதலாக கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #nipahvirus
    ×